Advertisment

”தமிழக அரசின் ஒப்புதலின்றி மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது”: முதலமைச்சர் கடிதம்

மேகதாதுவில் அணைகட்ட எவ்வித ஒப்புதலும் வழங்க வேண்டாம் என வனம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
”தமிழக அரசின் ஒப்புதலின்றி மேகதாதுவில் அணை கட்ட  அனுமதி வழங்கக் கூடாது”: முதலமைச்சர் கடிதம்

மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அனுப்பியுள்ள நிலையில், தமிழக அரசின் ஒப்புதலின்றி காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்கக் கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதிக்கு புதன் கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

காவிரி நதிநீர் விவகாரத்தால், தமிழகம் - கர்நாடகம் இருமாநிலங்களுக்கு இடையே பிரச்சனைகள் தொடர்ந்து வரும்நிலையில், கர்நாடக அரசு காவிரி குறுக்கே மேகதாது எனும் இடத்தில் அணை கட்ட தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. காவிரி நீர் முழுவதையும் தங்களின் சொந்த பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக கர்நாடகம் பயன்படுத்தும் நோக்கிலேயே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகம் முயற்சிப்பதாகவும், அங்கு அணை கட்டினால் காவிரி மீதான தமிழகத்தின் உரிமை முற்றிலும் பறிக்கப்படும் எனவும், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 7-ஆம் தேதி அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து ஒப்புதலுக்காக, மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளருக்கு கர்நாடக அரசு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது.

மத்திய அரசுக்கு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கையில் கர்நாடக அரசு திட்டம் தொடர்பாக தவறான தகவல்களை அளித்துள்ளதாகவும், தமிழகத்திற்கு உரிய தண்ணீர் வழங்கவே அணை கட்டவிருப்பதாக கர்நாடக அரசு போலியாக அறிக்கையில் கூறியிருப்பதாகவும் பா.ம.க. தலைவர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கடும் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசின் ஒப்புதலின்றி காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதிக்கு புதன்கிழமை கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்த்தில், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பிற்கு புறம்பாக மேகதாதுவில் அணைகட்ட தொழில்நுட்ப - பொருளாதார அனுமதியை கோரி மத்திய அரசை கர்நாடகம் அனுகியிருப்பது துரதிருஷ்டவசமானது என முதலமைச்சர் குறிப்பிட்டார். மேலும், தமிழக அரசின் அனுமதியின்றி மத்திய அரசுக்கு விரிவான திட்ட அறிக்கையை அனுப்பியிருப்பது காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரானது எனவும், காவிரி பிரச்சனை முடியும் வரை கர்நாடகாவின் எந்த திட்டங்களுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், மேகதாதுவில் அணைகட்ட எவ்வித ஒப்புதலும் வழங்க வேண்டாம் என வனம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன் கடிதத்தில் கேட்டுக்கொண்டார்.

Cauvery Issue
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment