ஆளுநர் கூட்டங்களில் பங்கேற்க கூடாது என மாவட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுகளையும், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் அவர் இரு நாட்களுக்கு முன்பு ஆய்வு நடத்தினார்.
இதற்கு, ஆளுநர் தன் வரம்புகளை மீறி செயல்படுவதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து, முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதில், “ஆளுநர் கூட்டங்களில் பங்கேற்க கூடாது என மாவட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்”, என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
To be worthy of the office he holds, TN Chief Minister should instruct District Administrations to refuse to participate in meetings called by the Governor.
— P. Chidambaram (@PChidambaram_IN) 17 December 2017
மேலும், அரசாங்கத்தின் பெயரளவிலான தலைமைதான் ஆளுநர் எனவும், அவர் உண்மையான தலைமை பதவி கிடையாது எனவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், மத்திய அரசுக்கு பயந்து முதலமைச்சர் அமைதிகாப்பதால், ஆளுநர் தன் வரம்பை மீறி செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
Amused by TN Governor's statement. Governor is only the 'titular' head of the Executive, not the 'real' head. Since the real head, the Chief Minister, is cowering in fear of the central government, the TN Governor is exceeding his authority.
— P. Chidambaram (@PChidambaram_IN) 17 December 2017
இதனிடையே, தமிழகத்தில் ஆய்வு நடத்த ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது என ஆளுநர் மாளிகை நேற்று (சனிக்கிழமை) அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.