முஸ்லிம்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
இது குறித்து அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் நிருபர்களிடம் கூறும் போது, ‘தமிழகத்தில் வேலூர், திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளில் வானில் முதல்பிறை தெரிந்தது. எனவே ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படும்’ என்றார்.