இன்று காலையிலேயே சென்னை மேகமூட்டத்துடன் இருந்தது. ஒருசில இடங்களில் மழை பெய்தது. ஆனால், மதியம் முதல் வழக்கம் போல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. அதிகபட்சமாக திருத்தணியில் 45.5 டிகிரி வெப்பம் பதிவானது. சென்னை மண்டல வானிலை மைய அறிக்கையின்படி, இன்று (17.05.2017) தமிழகத்தில் பதிவான வெப்பநிலை குறித்த தகவல்களை பார்ப்போம்.
வெயிலால் அவதிப்படும் ஒவ்வொரு ஊர்க்காரர்கள் நிலைமை என்னவாக இருக்கும் என்ற ஒரு சிறிய கற்பனையுடன் இதோ.....
சென்னை - 41.9 (வூட்டாண்ட வந்துடாத...டிரவுசர் அவுந்துடுச்சு)
வேலூர் - 42.9 (டிரவுசரே போடலப்ப)
சேலம் - 40.0 (எடப்பாடி ஐயா... )
மதுரை - 39.8 (எலே...அருவால தீட்ரா...
'அவென் அவென் அவிஞ்சு போய் கெடக்குறாய்ங்க.. அருவால தீட்டணுமாம்ல...')
கடலூர் - 39.6 (முடியல....)
கோவை - 36.5 (ஏனுங்க... அந்த காத்தாடி சுச்ச போடுங்க...)
கரூர் - 41.8 (என்றா இது? முட்ட வாங்கிட்டு வர சொன்னா, ஆம்ப்லேட் வாங்கிட்டு வந்துருக்க!?..
'வாங்கும்போது முட்டையா தானுங்க இருந்துச்சு')
தஞ்சை - 40.5 ('சின்னம்மா' வெளில வந்தா வெயிலே அடி பனிஞ்சிடும் பாத்துக்க)
திருச்சி - 42.1 (ஏன் கண்ணு கலங்குது? அது என் கண்ணீர் இல்லப்பா... வேர்த்து வரும் வெந்நீரு)
தூத்துக்குடி - 34.0 ('சிங்கம் 4'-ஐ இந்த கிளைமேட்லயே எடுத்துறது நல்லது)
உதகை - 24.8 (என்னா ஒரு காத்தோட்டம்... )
திருத்தணி - 45.5 (எங்கயா ஊருல யாருமே இல்ல...? முருகனே திருத்தணியை காலிப் பண்ணியாச்சு .. போவியா..)