Advertisment

திருச்சி உழவர் சந்தையில் அரை மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்த தக்காளி!

திருச்சி உழவர் சந்தையில் கிலோ 80 ரூபாய்க்கு தக்காளி விற்பனையை துவக்கி வைத்த ஆட்சியர்; அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்தன

author-image
WebDesk
New Update
tomato prices

தக்காளி

அத்தியாவசிய உணவுப்பொருட்களில் ஒன்றான தக்காளியின் விலை திடீரென உச்சத்தை தொட்டதால் பாமரர்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை கொஞ்சம் தவிப்பில்தான் இருக்கின்றனர்.

Advertisment

   தக்காளி சமையலுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது. கடந்த சில நாட்களாக தக்காளி விலை உச்சத்தில் உள்ளது. தக்காளி விலைதான் அவ்வாறு உள்ளது என பார்த்தால் மற்ற காய்கறிகளின் விலையும் ஏறிக்கொண்டே போகின்றது. அதேபோல், அத்தியாவசியமாக கருதப்படும் சின்ன வெங்காயத்தின் விலையும் ஏற்றத்தில் காணப்படுவதால் உணவுப் பொருட்களின் விலையில் அன்றாடம் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றது.

இதையும் படியுங்கள்: சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்; பொள்ளாச்சி கவியருவியில் குளிக்க வனத்துறை அனுமதி

  தமிழகத்தின் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை ஏற்றத்தால் உணவு விடுதிகளில் உணவுப் பொருட்களின் விலையும் ஏற்றமடைந்திருக்கின்றது. இதனால் தக்காளி விலையை முறைப்படுத்த தமிழக அரசு நியாய விலைக்கடைகள், பசுமைச்சந்தைகளில் தக்காளியை இறக்குமதி செய்து குறைந்த விலையில் விற்க ஏற்பாடு செய்திருக்கின்றது.

   அந்தவகையில், திருச்சி மாவட்டத்தில் உழவர் சந்தைகள் மற்றும் தோட்டக்கலை விற்பனை நிலையம் மூலமாக வெளி சந்தைகளை விட குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும், இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

  அதன்படி திருச்சி கே.கே நகர் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தக்காளி கிலோ 80 ரூபாய்க்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வினை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

   மாவட்ட நிர்வாகம் சார்பில் இ-சந்தை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து தக்காளி நேரடி கொள்முதல் செய்யப்பட்டு விற்க முடிவு செய்யப்பட்டு திருச்சி கே.கே.நகர் மற்றும் மாநகரின் முக்கிய உழவர் சந்தைகளில் சந்தைப்படுத்தப்பட்டது.

   தக்காளி கிலோ 80 ரூபாய் என்றாலும் வியாபாரிகளும், பொதுமக்களும் வாங்கி சென்றனர். தக்காளிக்கு இவ்ளோ டிமாண்ட் உள்ளதால் தக்காளி விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தாலும், பாமரர்கள் நடுத்தர சிறுகுறு உணவு விடுதிகளை நடத்தி வருபவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

  திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மாவட்ட ஆட்சியர் தக்காளி விற்பனையை துவக்கி வைத்து, உழவர் சந்தையை ஆய்வு செய்து வெளியேறும் முன்பே அதாவது அரை மணி நேரத்திற்குள்ளாகவே அனைத்து தக்காளியும் விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment