Advertisment

தொலைக்காட்சி நிறுவனங்களின் கட்டண விகிதங்களை கட்டுப்படுத்த டிராய்க்கு அதிகாரம் - ஐகோர்ட்

தொலைக்காட்சி நிறுவனங்கள் கட்டண விகிதங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் டிராய்க்கு உள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தொலைக்காட்சி நிறுவனங்களின் கட்டண விகிதங்களை கட்டுப்படுத்த டிராய்க்கு அதிகாரம் - ஐகோர்ட்

தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் கட்டண விகிதங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் டிராய்க்கு உள்ளது என்ற தலைமை நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்.

Advertisment

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், பொது மக்கள் விரும்பும் சேனல்களை குறைந்த கட்டணத்தில், அதாவது 100 இலவச சேனல்களை 130 ரூபாய்க்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும் எல்லா விநியோகஸ்தர்களும் ஒரே மாதிரியான கட்டண நிர்ணயம் செய்ய வேண்டு மென்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளையும் விதித்து, வரைவு விதிகளை வெளியிட்டது. அதன்பிறகு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்தாண்டு மார்ச் 3 ஆம் தேதி (2017) தனது புதிய விதிகளையும், கட்டணம் தொடர்பான விதிமுறைகளையும் அறிவிப்பாணையாக டிராய் வெளியிட்டது. இந்த புதிய விதிகளின் படி கட்டண தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களின் மொத்த தொலைக்காட்சிக்கும் அதிகபட்சமாக 19 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் ( ஒரு நிறுவனத்தில் எத்தனை தொலைக்காட்சி சேனல்கள் இருந்தால் அதிகபட்சமாக 19 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும்) என உத்தரவிட்டது.

இந்த புதிய விதிகளை எதிர்த்து ஸ்டார் இந்தியா நிறுவனமும், விஜய் டெலிவிஷன் நெட்வொர்க் நிறுவனமும் ஆகியவை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றன, தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் சார்பில் ஏற்கெனவே மூத்த வழக்கறிஞர்கள் ப.சிதம்பரமும், அபிஷேக் சிங்வியும் ஆஜராகி வாதிட்டனர். அதேபோல டிராய் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்யும் அனைத்து சேனல்களுக்கான கட்டணத்தையும் நிர்ணயம் செய்யவும், அதை ஒழுங்குபடுத்தவும் எல்லா உரிமையும் டிராய்க்கு உள்ளது என்றும், இலவச சேனல்களையும், கட்டண சேனல்களையும் ஒன்றாக ஒரே பேக்கேஜில் கலந்து வழங்கக்கூடாது என்றும், தனித்தனி பேக்கேஜ்களாகவே வழங்க வேண்டுமெனவும் டிராய் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் சார்பில் இவ்வாறு கட்டணம் நிர்ணயம் செய்யவும், புதிதாக விதிமுறைகளை வகுக்கவும் டிராய்க்கு அதிகாரமில்லை என்றும், ஏற்கெனவே குறைந்தவிலைக்கே கட்டண சேனல்களை வழங்கி வருவதாகவும் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு கடந்த மார்ச் மாதம் (2018) தீர்ப்புளித்தனர்.

அதில் தலைமை நீதிபதி அளித்த தீர்ப்பில் தனியார் சேனல்களுக்கான கட்டண விகிதம் தொடர்பாக டிராய் கொண்டு வந்துள்ள விதிகள் செல்லும் என தீர்ப்பளித்தார்.

ஆனால், அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதி எம்.சுந்தர், டிராய் கொண்டு வந்துள்ள புதிய கட்டண விகிதம் தொடர்பான விதிகள் சட்டத்திற்கு விரோதமானவை என்றும், ஆகவே அதை ரத்து செய்வதாகவும் தீர்ப்பு அளித்தார்.

நீதிபதிகள் தங்களுக்குள் மாறுபட்ட தீர்ப்பினை அளித்ததால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மூன்றாவது நீதிபதியாக இந்த வழக்கை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்து இன்று தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில் இந்த வழக்கில் தனியார் தொலைக்காட்சிக்கு கட்டண நிர்ணயம் உள்ளிட்ட அனைத்து விதிகளையும் கொண்டுவர டிராய்க்கு அதிகாரம் இருப்பதாகவும் இந்த வழக்கில் தலைமை நீதிபதி அளித்த தீர்ப்பை உறுதி செய்வதற்காக தீர்ப்பளித்தார்.

Chennai High Court Trai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment