Advertisment

மலர்களைக் கொட்டி ஆட்சியர் அலுவலகத்தை திணறடித்த விவசாயிகள் போராட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் பூக்களை கொட்டி போராட்டம் நடத்தினர்.

author-image
WebDesk
New Update
Trichy Farmers protest

Trichy Farmers protest

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமையில் நடைபெற்றது.

Advertisment

இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் சார்பில் பூக்களுக்கு உரிய விலை வழங்கப்படாததை கண்டித்தும், ஸ்ரீ ரங்கத்தில் அரசால் கட்டப்பட்ட பூ மார்க்கெட் தற்போது வரை செயல்படாமல் மூடப்பட்டு இருப்பதை கண்டித்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பூக்களை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவிக்கையில்; தேர்தல் நேரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. மேலும், விவசாயத்தில் விவசாய தொழிலாளர்களின் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்.

விவசாய தொழிலில் இடுபொருட்களின் விலை உயர்வு, இயற்கை சீற்றம் போன்ற நெருக்கடிகளை கடந்து மலர் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் உற்பத்தி செலவு கூட கிடைக்கமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

publive-image

பூக்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நறுமண தொழிற்சாலை ஏற்படுத்தி தர வேண்டும் என அரசை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகின்றது என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் மலர்களைக் கொட்டி போராட்டம் நடத்திய சம்பவம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment