New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/12/a341.jpg)
ஜெயலலிதாவுக்கு அடுத்ததாக யார் என்ற போட்டியில் தினகரன் வென்றுள்ளார். அதேசமயம், பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாததால் தேர்தல் ஆணையத்துக்கு தோல்வி என்பதே உண்மை
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 14 சுற்றுகள் முடிந்திருக்கும் நிலையில், டிடிவி தினகரன் 68,302 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 36,201 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 18,298 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் 3,083 வாக்குகளையும், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 942 வாக்குகளையும் பெற்றுள்ளனர். பாஜக பெற்றிருக்கும் இந்த வாக்கு எண்ணிக்கை, நோட்டாவின் வாக்குகளை விட மிகவும் குறைவானதாகும்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில், "ஜெயலலிதாவுக்கு அடுத்ததாக யார் என்ற போட்டியில் தினகரன் வென்றுள்ளார். அதேசமயம், பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாததால் தேர்தல் ஆணையத்துக்கு தோல்வி என்பதே உண்மை. வாக்குக்கு பணம் தராததன் மூலம் திமுக வேட்பாளர் தார்மீக வெற்றியை பெற்றுள்ளார். நோட்டா வாக்குகளில் பாதியை கூட பாஜக பெறாதது வகுப்புவாதம் எடுபடாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.