Advertisment

இரட்டை இலை சின்னம் வழக்கு : 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்

இரட்டை இலை வழக்கு விசாரணையில் இன்று (அக்டோபர் 23) தேர்தல் ஆணையம் முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும், சசிகலா தரப்பும் கலந்து கொண்டனர்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
election commission of india, two leaves symbol, aiadmk, tamilnadu government, t.t.v.dhinakaran, deputy cm o.panneerselvam, cm edappadi palaniswami, vk sasikala

இரட்டை இலை வழக்கு விசாரணையில் இன்று (அக்டோபர் 23) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும், சசிகலா தரப்பும் கலந்து கொண்டனர். டிடிவி தரப்பில் புதிதாக 2 புகார்கள் வழங்கப்பட்டது.

Advertisment

இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக அதிமுக அணிகள் இடையிலான பிரச்னையை இந்திய தேர்தல் ஆணையம் விசாரித்து வருகிறது. இதில் இறுதி தீர்ப்பை அக்டோபர் 31-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து இரு அணிகளும் தங்கள் பிரமாண பத்திரங்கள் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு எல்எல்ஏ, எம்பிக்கள் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து விவரங்களையும் ஆணைய அதிகாரிகள் முன்னிலையில் தாக்கல் செய்தனர்.

இரட்டை இலை வழக்கை அக்டோபர் 6-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் 3 ஆணையர்களும் அமர்ந்து விசாரித்தனர். அன்று இபிஎஸ்-ஓபிஎஸ் அணி சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. டி.டி.வி.தினகரன் தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 13-ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. அந்த அவகாசமும் போதாது என மீண்டும் டி.டி.வி.தினகரன் தரப்பில் வற்புறுத்தினர்.

இரட்டை இலை வழக்கில் இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு போலியான ஆவணங்களை தாக்கல் செய்திருப்பதாகவும், அது தொடர்பாக குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்பு வேண்டும் என்றும் டி.டி.வி.தினகரன் தரப்பில் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதை ஏற்காத தேர்தல் ஆணையம், வேறு காரணம் எதுவும் கூறாமல் அக்டோபர் 16-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அக்டோபர் 16-ம் தேதி விசாரணையில் இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பிலும், டிடிவி தரப்பிலும் வாதங்களை முன்வைத்தனர். அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 23-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் தள்ளி வைத்தது. அதன்படி 3-வது கட்ட விசாரணை இன்று (அக்டோபர் 23) நடக்கிறது.

இதில் கலந்துகொள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ்பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நேற்று (22-ம் தேதி) காலையில் டெல்லிக்கு கிளம்பினர். நேற்று மாலையில் மைத்ரேயன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, ‘டி.டி.வி.தினகரன் தரப்பு தாக்கல் செய்த ஆவணங்கள்தான் போலியானவை’ என்றார். இபிஎஸ் ஆதரவாளரான அமைச்சர்கள் தங்கமணி, ஜெயகுமார் மற்றும் தளவாய்சுந்தரம் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர்.

இரட்டை இலை வழக்கில் இதுவரை கால அவகாசம் மட்டுமே கேட்டுவந்த டி.டி.வி.தினகரன் தரப்பு, முதல்முறையாக விசாரணையை எதிர்கொள்ள டெல்லிக்கு கிளம்பிச் சென்றிருக்கிறது. டிடிவி அணி சார்பில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களான செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட பலர் டெல்லிக்கு சென்றிருக்கிறார்கள்.

இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் விசாரணையை 4.30 மணிக்கு தள்ளி வைக்கும்படி டிடிவி அணி சார்பில் இரு தினங்களுக்கு முன்பே தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அபிஷேக் மனு சிங்வி ஆஜராவதற்கு வசதியாகவே அந்த ஒன்றரை மணி நேர தள்ளிவைப்பை டிடிவி அணி கோரியது. ஆனால் அதை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.

பிரதமர் மோடியின் ஆதரவு தங்களுக்கு இருப்பதால் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பெரியகுளம் பொதுக்கூட்டத்தில் பேசியதையும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு இன்று டிடிவி தரப்பில் கொண்டு சென்றனர். இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த அபிடவிட்களில் 10 அபிடவிட்கள் போலியானவை என்றும் டிடிவி தரப்பு புகார் கூறியிருக்கிறது.

election commission of india, two leaves symbol, aiadmk, tamilnadu government, t.t.v.dhinakaran, deputy cm o.panneerselvam, cm edappadi palaniswami, vk sasikala ஓ.பன்னீர்செல்வம் அணியினர் முன்கூட்டியே வந்து காத்திருந்த காட்சி

விசாரணையை முன்னிட்டு பிற்பகல் 2.30 மணிக்கே ஓபிஎஸ் ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மனோஜ்பாண்டியன், கே.சி.பழனிசாமி, மைத்ரேயன் ஆகியோர் தேர்தல் ஆணைய அலுவலகம் வந்தனர். இபிஎஸ் தரப்பு அமைச்சர்கள் வரும் முன்பே இவர்கள் மட்டும் வந்து காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

6:45 இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு வரும் 30-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் வைத்தது.

3.45 மணி : தேர்தல் ஆணைய வழக்கில் அதிமுக உறுப்பினர் என்ற முறையில் தன்னையும் இணைக்க வேண்டும் என திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மனு கொடுத்தார். சசிகலாவும், தினகரனும் கட்சி உறுப்பினர்களே அல்ல என அவரது தரப்பில் கூறப்பட்டது. இரட்டை இலை வழக்கை அக்டோபர் 31-க்குள் தேர்தல் ஆணையம் முடிக்க வேண்டும் என மதுரை உ யர் நீதிமன்றக் கிளையில் உத்தரவு பெற்றவர் இவர்.

மாலை 3.30மணி : ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ.வான செம்மலை இதில் ஒரு மனுதாரராக இணைந்துகொண்டு, அவரது தரப்பில் வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆஜராகி வாதாடினார். ‘கட்சியின் விதிப்படி சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தலைமை தாங்கும் தகுதி பெற்றிருக்கவில்லை. இது குறித்து கடந்த 3 விசாரணைகளிலும் டிடிவி தரப்பு பதிலே கூறவில்லை. நாங்கள் தாக்கல் செய்த 1877 புதிய அபிடவிட்களிலும் வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவனங்களை இணைத்துள்ளோம். எனவே அவை போலி அல்ல. எங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும்’ என கோரினார் அவர்.

மாலை 3.00 மணி : இபிஎஸ்-ஓபிஎஸ் அணி போலியான ஆவணங்களை தாக்கல் செய்திருப்பதாக டிடிவி தரப்பு கொடுத்த புகாருக்கு பதில் கூறுகிற விதமாக இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதங்களை முன்வைத்தார். டிடிவி தரப்பு திட்டமிட்டு விசாரணையை காலதாமதம் செய்ய முயற்சிப்பதாக அப்போது அவர் குற்றம் சாட்டினார்.

 

Vk Sasikala Two Leaves Symbol T T V Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment