Advertisment

மதுசூதனன் தலைமையிலான அணிக்கு இரட்டை இலையாம்! என்ன சொல்ல வருகிறார் ஓபிஎஸ்?

இரட்டை இலை சின்னம் கிடைத்ததும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு அதிமுக வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
O. Paneerselvam

இரட்டை இலை சின்னம் கிடைத்ததும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு அதிமுக வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

Advertisment

இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்கிற விவகாரம், டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருந்தது. இதில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஒரு தரப்பாகவும், மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்னொரு தரப்பாகவும் இருந்தார்கள். ஆரம்பத்தில் சசிகலா தரப்புக்காக அபிடவிட்களை வாங்கிக்குவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் இணைந்தார்கள்.

இரட்டை இலை யாருக்கு? என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உச்சநீதிமன்றம் அவகாசத்தை நவம்பர் 10 வரை நீட்டித்தது. ஆனால் சசிகலா, டி.டி.வி.தினகரன் அணி தரப்பினர் இந்த வழக்கில் கூடுதல் அவகாசம் கேட்டு வந்ததால் விசாரணை தள்ளிச் சென்றது.

இரட்டை இலை வழக்கில் 7-வது மற்றும் இறுதிகட்ட விசாரணை டெல்லியில் இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நவம்பர் 8-ம் தேதி நடைபெற்றது. பிறகு தேதி குறிப்பிடாமல் உத்தரவு வழங்குவதை தள்ளி வைத்தனர். அந்த வழக்கில் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக உத்தரவை பிறப்பித்தது. அதன்படி இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டிருக்கிறது.

இரட்டை இலை வழக்கில் சசிகலா தரப்பு ஒரு மனுதாரராகவும், இ.மதுசூதனன் தரப்பு இன்னொரு மனுதாரராகவும் இருந்ததால் இ.மதுசூதனன் தலைமையிலான தரப்பிற்கு வழங்குவதாகத்தான் தேர்தல் ஆணைய அறிவிப்பில் இருக்கிறது. ஆனால் மீடியாவும் இதர அதிமுக தலைவர்களும் இதை இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு கிடைத்த வெற்றியாகவே குறிப்பிட்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பதிவில் ஒருங்கிணைந்த அணிக்கு இரட்டை இலை கிடைத்ததாக குறிப்பிடவில்லை. மாறாக தேர்தல் ஆணைய அறிக்கையில் இருப்பதுபோலவே இ.மதுசூதனன் தலைமையிலான அணிக்கு இரட்டை இலை வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருப்பது பலரது புருவங்களை உயர வைத்திருக்கிறது.

இபிஎஸ்_ஓபிஎஸ் ஒருங்கிணைந்த அணியில் ஓபிஎஸ் ஆதரவு தொண்டர்கள் ஒதுக்கப்படுவதாக மைத்ரேயன் எம்.பி ஏற்கனவே போர்க்குரல் எழுப்பியிருந்தார். இந்தச் சூழலில் ‘இ.மதுசூதனன் தலைமையிலான அணி’ என ஓபிஎஸ் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இனி இபிஎஸ் அணியினர் முறைத்துக்கொண்டு வெளியே சென்றாலும்கூட, இ,மதுசூதனன் - ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் வசமே இரட்டை இலை இருக்கும் என்கிற ஒரு கருத்து இருக்கிறது. இதை உணர்த்தும் வகையிலேயே ஓபிஎஸ் அந்த ட்விட்டர் பதிவில் ‘இ.மதுசூதனன் தலைமையிலான அணி’ என்பதை வெளியிட்டார் என்கிறார்கள்.

ஆட்சி பலம் மற்றும் மெஜாரிட்டி நிர்வாகிகளை கைவசம் வைத்துக்கொண்டு, ஓபிஎஸ் அணியை இனி ஓரங்கட்ட முடியாது என்கிற கருத்தும் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

 

Vk Sasikala Two Leaves Symbol T T V Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment