‘உங்களுக்கு தகுதி இருக்கா? அருவருப்பா இருக்கு’ என்று கோவமாக டுவீட் செய்த திமுக தொண்டரிடம் உதயநிதி ஸ்டாலின் தவறை ஏற்றுகொண்டதாக பதிலளித்துள்ளார்.
பேனரில் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம்:
திமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம், கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. தஞ்சாவூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் புகைப்படங்கள் கொண்ட பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
தவறை ஒப்புக்கொண்டார் உதயநிதி:
அதைப் பார்த்த திமுக தொண்டர் ஒருவர், ‘மிஸ்டர் உதயநிதி, ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பாக இருக்கு தெரியுமா? உங்களுக்குத் தோணலையா? முன்னணி தலைவர்கள் மேடையில, உங்கள் போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன?’ என்று ஷாமுராய் என்பவர் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.
September 2018Mr @Udhaystalin ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பா இருக்கு தெரியுமா?
உங்களுக்கு தோணலையா?
முன்னனி தலைவர்கள் மேடைல உங்க போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன? pic.twitter.com/jipMT6ozOD
— Shamurai (@Shamurai10)
Mr @Udhaystalin ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பா இருக்கு தெரியுமா?
— Shamurai (@Shamurai10) September 7, 2018
உங்களுக்கு தோணலையா?
முன்னனி தலைவர்கள் மேடைல உங்க போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன? pic.twitter.com/jipMT6ozOD
அதற்குப் பதிலளித்துள்ள உதயநிதி, ‘தவறு... மீண்டும் நடக்காது’ என உறுதியளித்துள்ளார்.
September 2018தவறு! மீண்டும் நடக்காது! https://t.co/OseQJd2WF4
— Udhay (@Udhaystalin)
தவறு! மீண்டும் நடக்காது! https://t.co/OseQJd2WF4
— Udhay (@Udhaystalin) September 7, 2018
இந்தப் பதிவுக்குக் கீழே பலரும் உதயநிதிக்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.