Chennai Tamil News: சென்னையில் உள்ள அடையாறு ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய்களுக்கு அடியில் மெட்ரோ கட்டுவதற்கு தமிழ்நாடு கடலோர மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
சுமார் 55 கிலோமீட்டர் இடைவெளிக்கு ஒரு மெட்ரோ ரயில்கள் என இயங்கிக்கொண்டிருக்கும் சென்னையில், இரண்டாம் கட்டமாக 118.9 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை கட்ட முடிவெடுத்துள்ளனர்.
இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் கட்டுமானத்திற்கு ரூ.63,200 கோடி செலவாகும் என கூறுகின்றனர். மேலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. அளவிற்கான மெட்ரோ கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
அடையாறு ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய்க்கு கீழே மெட்ரோ ரயில் சுரங்கம் அமைய உள்ளது. ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பாதைகள் கட்டியபின்பு சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் மூலம் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.
திருமயிலையில் வரும் பக்கிங்காம் கால்வாயில் 58.33 கிலோமீட்டர் தொலைவிற்கும், அடையாறு ஆற்றில் 666.03 கிலோமீட்டர் தொலைவிற்கும் மற்றும் இந்திரா நகரில் வரும் பக்கிங்காம் கால்வாயில் 1219.86 மீ என்று மொத்தம் 1219.86 மீட்டர் தொலைவிற்கு அளவு கணக்கிடப்பட்டுள்ளது.
கணக்கெடுக்கப்பட்ட நீர் நிலைகளில் உள்ள பாதைகளுக்கு அனுமதி அளிக்கக் கோரி மெட்ரோ ரயில் சார்பாக மாநில கடலோர மேலாண்மை ஆணையத்திற்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது.
இதை பரிசீலனை செய்த ஆணையம், இத்திட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளது. இதன்பிறகு மத்திய கடலோர ஒங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கிடைத்தபின்பு கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil