/tamil-ie/media/media_files/uploads/2017/05/a317.jpg)
தமிழீழப் புலிகளுக்கு ஆதரவாக, 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி வைகோவுக்கு சிறைத் தண்டனை விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, வைகோ புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி, 15 நாள்கள் காவல் முடிந்து நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதியிடம், 'நான் ஜாமீனில் செல்ல விரும்பவில்லை' எனக் கூறியதால், காவல் நீட்டிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், வைகோவின் காவலை ஜூன் 2-ஆம் தேதி வரை நீட்டித்தது.
இந்தச் சூழ்நிலையில், 50 நாள்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் வைகோ, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.