/indian-express-tamil/media/media_files/2025/11/02/vijay-2025-11-02-13-24-50.jpg)
சென்னை பனையூரில் உள்ள த.வெ.க கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜய்யின் பிரச்சாரத்தின் போது பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் தொகுதிக்கு இரண்டு பேர் என்ற விகிதத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 468 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என தேர்வு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஆண்கள் இந்த கூட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். ஆலோசனைக் கூட்டத்திற்கு வாரத பெண்கள் காணொலி காட்சிகள் வாயிலாகவும் அல்லது தலைமை நிர்வாகிகள் மூலம் கருத்துகளை கேட்டறியும் விதமாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இனி வரும் காலத்தில் விஜய்யின் பிரச்சாரக் கூட்டங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த தொண்டர் அணி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தை பொறுத்தவரை அவர்கள் எவ்வாறு பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஒரு பொதுக்கூட்டமோ அல்லது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தால் விஜயை எந்த அளவிற்கு பாதுகாப்பாக அந்த திடலுக்கு அழைத்து செல்ல வேண்டும். எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து வலியுறுத்தவே இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு அனுபவம் வாய்ந்தவர்கள் வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ராணுவ வீரர்கள், காவலர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தை பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் தலைமை தாங்கி ஆலோசனை வழங்க உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us