/indian-express-tamil/media/media_files/2025/09/27/tvk-rally-tragedy-karur-2025-09-27-22-12-51.jpg)
TVK rally tragedy Karur
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் பலர் உயிரிழந்ததுடன், 58 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துரதிர்ஷ்டவசமான கூட்ட நெரிசல், ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டவர்களில் 31 பேர் உயிரிழந்ததாகத் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமையின் தீவிரத்தைக் கருதி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவக் குழுவினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மயக்கமடைந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கரூரில் நடந்த இந்த துயர சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர்.
விஜய் இரங்கல்
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
— TVK Vijay (@TVKVijayHQ) September 27, 2025
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை…
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தன் X பக்கத்தில் வெளியிட்ட் பதிவில்;
”கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.
கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவர்களையும் - மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ஏடிஜிபி-யிடமும் பேசியிருக்கிறேன்.
பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தன் X பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவு
தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற…
— Narendra Modi (@narendramodi) September 27, 2025
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட இரங்கல் பதிவு
Anguished to know about the tragic loss of lives in a stampede-like unfortunate incident in Karur district of Tamil Nadu. I extend my deepest condolences to the bereaved family members and pray for early recovery of those injured.
— President of India (@rashtrapatibhvn) September 27, 2025
"தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசல் போன்ற ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிர்களை இழந்த துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்."
எடப்பாடி பழனிச்சாமி தன் X பக்கத்தில் வெளியிட்ட பதிவு
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் அவர்கள் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்ததாகவும், மற்றும் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது .
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் அவர்கள் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்ததாகவும், மற்றும் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) September 27, 2025
அன்புமணி ராமதாஸ் தன் X பக்கத்தில் வெளியிட்ட பதிவு
"பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி 31 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பரப்புரைக்கான ஏற்பாடுகளை செய்வதிலும், கூட்டத்தை காவல்துறையினர் ஒழுங்குபடுத்துவதிலும் செய்த குளறுபடிகள் தான் இதற்கு காரணமாகும். கரூர் நெரிசல் மற்றும் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்; இனியும் இத்தகைய விபத்துகள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்"
கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரத்தில் நெரிசலில்
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) September 27, 2025
சிக்கி 31 பேர் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது:
உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!
கரூர் நகரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், மேலும்…
பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தன் X பக்கத்தில் வெளியிட்ட பதிவு
"கரூரில் நடந்த அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தோர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கிட அரசை வலியுறுத்துகிறேன்."
கரூரில் நடந்த அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.@BJP4TamilNadu-வின் மூத்த தலைவர்களை மருத்துவமனைக்கு விரைந்து, பாதிக்கப்பட்டோருக்கு உரிய உதவிகள் செய்திட கேட்டுக்கொண்டுள்ளேன். கரூர் மாவட்டத்தை…
— Nainar Nagenthran (@NainarBJP) September 27, 2025
அண்ணாமலை இரங்கல்
"திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது.
உடனடியாக, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்."
கரூரில், தவெக தலைவர் திரு. விஜய் அவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட சுமார் நாற்பது பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரியச்…
— K.Annamalai (@annamalai_k) September 27, 2025
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தன் X பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில்,
Deeply anguished by the tragic accident at a rally in Karur, Tamil Nadu. The loss of innocent lives is truly heartbreaking. My heartfelt condolences to the bereaved families. Praying for the speedy recovery of those who are injured.
— Rajnath Singh (@rajnathsingh) September 27, 2025
”கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயர விபத்து குறித்து அறிந்து ஆழ்ந்த வேதனையும் துயரமும் அடைகிறேன். அப்பாவி உயிர்கள் பறிபோனது என் மனதை உண்மையிலேயே நொறுக்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.
சிபிஐஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வேதனை
"எந்தவொரு பிரச்சாரக் கூட்டத்திலும் இவ்வளவு உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது." எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் எங்களை உட்படுத்திக்கொள்ள மாட்டோம்" என்ற ரசிகர்களின் செயல்பாடுகளே இதற்கு முக்கியக் காரணம். இந்த உயிரிழப்புகள் குறித்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும். ஏராளமான குழந்தைகள் உயிரிழந்தது மிகப்பெரிய சோகம்”
ரஜினிகாந்த் இரங்கல்
கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது.
— Rajinikanth (@rajinikanth) September 27, 2025
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்.#Karur#Stampede
ஆளுநர் ஆன்.என்.ரவி இரங்கல்
"கரூரில் நடந்த அரசியல் பேரணி கூட்டத்தில் குழந்தைகள் உள்பட அப்பாவி உயிர்கள் பறிபோனது மிகுந்த வலியையும் வேதனையையும் அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 27, 2025
கமல்ஹாசன் இரங்கல்
”நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன்.
நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்”.
நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 27, 2025
நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும்,…
மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்
" கரூரில் நடந்த அரசியல் பரப்புரையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான கூட்ட நெரிசலில் சிக்கி பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவும் காங்கிரஸ் தொண்டர்களைக் கேட்டுக் கொள்கிறேன் "
பிரியங்கா காந்தி இரங்கல்
தமிழ்நாட்டின் கரூரில் நடந்த துயரமிகுந்த கூட்ட நெரிசல் (stampede) சம்பவத்தால் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
இந்தச் சொல்லொணாத் துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல்களையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற நான் வேண்டுகிறேன், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.
இந்தப் பகுதியில் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உதவி செய்யவும், குடும்பங்களுக்கும் அதிகாரிகளுக்கும் நிவாரணப் பணிகளில் ஆதரவளிக்கவும் நான் வலியுறுத்துகிறேன்.
Heartbroken by the tragic stampede in Karur, TN.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) September 27, 2025
My thoughts and prayers are with the families who lost their loved ones in this unimaginable tragedy. May they find strength in this difficult time, and may the injured recover soon.
I urge all Congress workers in the region to…
கேசி வேணுகோபால் இரங்கல்
”தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பேரணியில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான கூட்ட நெரிசலில் (stampede) அப்பாவி மக்கள் உயிரிழந்தது மிகுந்த மனதை உலுக்கியது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறோம்.
இந்தப் பகுதியில் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும், நிவாரண நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு ஆதரவளிக்குமாறும் நான் வலியுறுத்துகிறேன்.”
The tragic stampede in a political rally in Karur, TN causing the death of innocent people is deeply disturbing.
— K C Venugopal (@kcvenugopalmp) September 27, 2025
We express our sincere condolences to the families of the bereaved, and pray for the speedy recovery of the injured.
I urge all Congress workers in the region to…
டிடிவி தினகரன் இரங்கல்
கரூரில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 30க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும்…
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 27, 2025
செல்வபெருந்தகை இரங்கல்
கரூரில் நடைபெற்ற நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், பலர் காயமடைந்ததும் மிகுந்த அதிர்ச்சி மற்றும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
— Selvaperunthagai K (@SPK_TNCC) September 27, 2025
பொதுமக்கள் உயிரிழந்த செய்தி தமிழ்நாடு முழுவதையும் துயரத்தில்…
அமைச்சர் ஜெய்ஷங்கர் இரங்கல்
தமிழ்நாட்டின் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் (stampede) சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.
உதயநிதி ஸ்டாலின் இரங்கல்
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கின்றன.
— Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Udhaystalin) September 27, 2025
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தோர் - உடல்நலம் குன்றியோருக்கு…
துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல்
கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த துயரமான சம்பவம் சொல்லொண்ணா வேதனையை அளிக்கிறது. தம் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மீளாத் துயரில் இருக்கும் தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில்…
— Vice-President of India (@VPIndia) September 27, 2025
ஜிவி பிரகாஷ்குமார் இரங்கல்
கோர காட்சிகள் நம்மை கதிகலங்க வைக்கிறது. யாருக்கு ஆறுதல் சொல்வது எப்படி தேற்றுவது என தெரியாமல் தவிக்கிறேன்.
— G.V.Prakash Kumar (@gvprakash) September 27, 2025
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும்.
நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் . 😭
ராகுல் காந்தி இரங்கல்
"தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பேரணியில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தால் பல விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனது அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுமாறும் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களை நான் வலியுறுத்துகிறேன்.
தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்
கரூரில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது கவலை அளிக்கிறது... இந்த கடுமையான சூழ்நிலையில் நாம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்போம்.. கரூர் மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டத்தை சார்ந்த சகோதரர்கள் அனைவரும் உடனே மருத்துவமனைக்குச் சென்று... என்ன உதவி வேண்டுமோ உடனே…
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) September 27, 2025
தங்கம் தென்னரசு இரங்கல்
கரூரிலிருந்து வரும் செய்திகள் மிகுந்த வருத்தத்தையும் வேதனையும் அளிக்கிறது. மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த துயரச் செய்தி, மேலும் துன்பம் தருவதாக அமைகிறது.
— Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@TThenarasu) September 27, 2025
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் போர்க்கால அடிப்படையில் உதவிகளை…
யோகி ஆதித்யநாத் இரங்கல்
"தமிழ்நாட்டின் கரூரில் நடந்த துயரமான விபத்து குறித்துக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். இந்தச் சோகமான சம்பவம் விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்துள்ளது.
துயருற்ற குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரபு ஸ்ரீ ராமர் அவர்களுக்கு வலிமையையும், பிரிந்த ஆத்மாக்களுக்கு அமைதியையும் தர வேண்டுகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்."
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.