/tamil-ie/media/media_files/uploads/2017/09/dindugal-srinivasan.png)
dindugal srinivasan, திண்டுக்கல் சீனிவாசன்
சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளகர்ள், உறவினர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று(9.11.12) காலையில் அதிரடி சோதனையை தொடங்கினர். சுமார் 180-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்படும் இந்த சோதனைக்கு, மத்திய, மாநில அரசுகளே காரணம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர்கூறும்போது, பாரத ரத்னா எம்.ஜி.ஆர் என்று கூறுவதற்கு பதிலாக பாரத பிரதமர் என்று கூறிவிட்டார். பாரத பிரதமர் எம்.ஜி.ஆர் என்ற அமைச்சரின் பேச்சு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
வருமான வரித்துறை சோதனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தற்போது தான் தூங்கி எழுந்து வருகிறேன் என மழுப்பலான பதிலளித்து நழுவிக்கொண்டார் திண்டுக்கல் சீனிவாசன்.
“இப்போது தான் தூங்கி எழுந்தேன்; ரெய்டு குறித்து ஒன்றும் தெரியாது” – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.