Advertisment

சென்னை ஏரிகளில் வண்டல் மண்ணை அகற்றம்: நீர்வளத்துறைக்கு ரூ.100 கோடி வருவாய்

சென்னை சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி, வீராணம், மற்றும் கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய ஆறு நீர்த்தேக்கங்கள் - 13.2 டிஎம்சி அடி மொத்த சேமிப்புக் கொள்ளளவைக் கொண்டுள்ளது.

author-image
WebDesk
New Update
சென்னை ஏரிகளில் வண்டல் மண்ணை அகற்றம்: நீர்வளத்துறைக்கு ரூ.100 கோடி வருவாய்

சென்னையில் உள்ள நீர்நிலைகளை தூர்வாருதல் தொடர்பான பரிந்துரைகளை மாநில அரசிடம் நீர்வளத்துறை சமர்ப்பித்துள்ளது. நீர்த்தேக்கத்தில் இருந்து சுமார் 2 கோடி கன மீட்டர் வண்டல் மண்ணை அகற்றி 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.

Advertisment

publive-image

பூண்டி நீர்த்தேக்கத்தில் மட்டும் தற்போது தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. வரவிருக்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டதும், அனைத்து நீர்த்தேக்கங்களிலும் பணிகள் தொடங்கப்படும் என்று நீர்வளத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதன்மை குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி நீர்த்தேக்கத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையினால், முழு கொள்ளளவை எட்டியபோது தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டது. நீர்வளத்துறை இந்த பணியை மீண்டும் தொடங்கி, இதுவரை 10,000 கன மீட்டர் வண்டல் நீர்த்தேக்கத்தை அகற்றியுள்ளது.

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment