சென்னையில், உடல் எடை குறைவதற்காக மாத்திரை எடுத்துகொண்ட நபர் மரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பி.சூர்யா என்பவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் பால் பண்ணையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 21 வயதாகிறது. இந்நிலையில் இவர் அதிகமான உடல் எடையில் இருப்பதாகவும் அதை குறைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் அவர் நண்பர் கூறிய ஆலோசனையின் அடிப்படையில் உடல் எடை குறைய மாத்திரைகள் எடுத்துக்கொண்டுள்ளார். இதனால் அவரது உடலில் அதிக மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஜனவரி 1-ம் தேதி அவர் மயக்கமடைந்தார். அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் அடுத்த கட்ட சிகிச்சைக்கு ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டபோது ,சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இந்நிலையில் இவரது தந்தை கொடுத்த புகாரின் பெயரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.