சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் அளித்த பேட்டியின் விபரம் வருமாறு:
ஆந்திரா பகுதிகளில் இயல்பை விட அதிகமாக வெப்ப நிலை பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் வட மேற்கு திசையை நோக்கி வெப்ப காற்று வீசி வருகிறது.
இதனால் கடந்த 24 மணி நேரத்தில் இயல்பை விட அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருத்தணியில் 45 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.
சென்னையை பொறுத்தவரை கடந்த 24 மணி வரை நுங்கம்பாக்கம் 40.1 வெப்பநிலையும், மீனம்பாக்கம் 42.1 வெப்பநிலையும் பதிவாகி உள்ளது.
மேலும் இடியுடன் கூடிய மழை மற்றும் கோடை மழையினால் கடந்த 24 மணி நேரத்தில் வேலூர், சேலம், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மழையின் அளவு: தக்கலை , தாளவாடி – 6 செ.மீ, தேன்கனிக்கோட்டை, சூளைகிரி – 5 செ.மீ , ஈரோடு, விருதுநகர் – 4 செ.மீ
அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். உள் மாவட்டங்களில் இயல்பை விட 3 அல்லது 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை வெப்பநிலை அவ்வப்போது 1 அல்லது 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் . அவ்வப்போது குறையும்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Why the hot climate interview with the director of weather center
அரசியலை விட்டு விலகுகிறேன், தொண்டர்களுக்கு நன்றி! – சசிகலா அறிவிப்பு
எம்ஜிஆர் குரல்… எம்ஜிஆர் வேடம்… நடிகை லதா! விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி வீடியோ
ஜேஇஇ மெயின்: மார்ச் மாத தேர்வுக்கு விண்ணப்ப செயல்முறை தொடங்கியது
நீச்சல் குளம்… கலர்ஃபுல் பிகினி… காலை உணவு! டிடி கொண்டாட்ட வீடியோ
அப்பார்ட்மென்ட் வாசிகளும் மாடித் தோட்டம் அமைக்கலாம்: இதைப் படிங்க!
பாஜகவுக்கு வீழ்ச்சி… ஆம் ஆத்மிக்கு எழுச்சி! டெல்லி இடைத்தேர்தல் உணர்த்துவது என்ன?