/tamil-ie/media/media_files/uploads/2017/09/Satellite.jpg)
உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்படும் எனவும், வருகிற அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை மாணவர்கள் படைப்புகளை அனுப்பலாம் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் சார்பாக உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.
ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் "அண்ட வெளியில் அந்நிய உலகத்தைத் தேடி" எனும் தலைப்பிலும், 9, 10-ஆம் வகுப்பு மாணவர்கள் "பூமியில் வாழும் சூழலற்றுப் போனால் அடுத்து என்ன?" எனும் தலைப்பிலும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் "இன்னொரு கிரகத்துக்கு இன்பச் சுற்றுலா போவோமா?" எனும் தலைப்பிலும் கட்டுரை எழுத வேண்டும்.
கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில், மாணவர்களின் சுய கையெழுத்தில் எழுதியிருப்பது அவசியம். இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதனை அப்படியே சமர்ப்பித்தால் அவை நிராகரிக்கப்படும்.
இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல், "ஏ4" தாளில் கட்டுரை இருப்பது அவசியம். ஒவ்வொறு தாளிலும் ஒரு பக்கம் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும். கட்டுரைகள் அக்டோபர் 5-ம் தேதிக்குள், ‘The Administrative officer, IPRC/ISRO, Mahendragiri P.O, Tirunelveli - 627 133 என்ற முகவரியில் சமர்பிக்கப்பட வேண்டும்.
தமிழ், ஆங்கில கட்டுரைகளில் தனித்தனியாக முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 04637-281210 / 283510, 9442140183, 9486692236 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.