ஜியோனி புதியதாக தனது ஏ-சீரியஸில், ஜியோனி ஏ1 லைட் என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த போனின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால் அதன் செல்ஃபி கேமரா தான். ஆம், 20 எம்.பி என்ற ஆச்சர்யமூட்டும செல்ஃபி கேமரா. அதோடு 4000mAh திறன் கொண்ட பேட்டரியும் இந்த ஸ்மார்ட்போனில் இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
கோல்டு மற்றும் ப்ளாக் என இரண்டு நிறங்களில் வெளிவருகிறது. ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஜியோனி ஏ1 லைட்-ன் விலை ரூ.14,999 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோனி ஏ1 சிறப்பம்சங்கள்
- 5.3 இன்ச் எச்.டி டிஸ்ப்ளே( 1280 x 720)
- ஆக்டா-கோர்-64 பிட் பிராசஸர்
- 3 ஜி.பி ரேம் மற்றும் 32 ஜி.பி ஸ்டோரேஜ்(மைக்ரோ எஸ்.டி கார்டு மூலமாக 256 ஜி.பி வரை மெமரியை அதிகப்படுத்திக் கொள்ளலாம் )
- இந்த ஸ்மார்ட்போனில் 4000mAh பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இதன் மூலம் 30 மணி நேரம் தடையில்லாத வெப் பிரவ்சிங் செய்ய முடியுமாம்.
- பெரும்பலான ஸ்மார்ட்போன்களில் இருப்பது போல இதிலும், 13-எம்.பி ரியர் கேமரா தான் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதில் செல்ஃபி கேமரா 20 எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது.
- 4ஜி வோல்ட்இ சப்போர்ட் , டுயல் சிம், ப்ளூடூத், ஜி.பி.எஸ் மறறும் யூஎஸ்பி ஓடிஜி ஆகியற்றை கொண்டுள்ளது.
- மேலும், போனின் பின்புறத்தில் உள்ள கேமராவிற்கு கீழ் பகுதியில், ஃப்ண்கர்பிரின்ட் ஸ்கேனரும் உள்ளது.
ஜியோனி நிறுவனமானது, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புததி ஆஃபர்களை வழங்குவதற்காக, ஏர்டெல் மற்றும் பேடிஎம் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. அதன்படி, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 1ஜி.பி அல்லது அதற்கு மேலான டேட்டா திட்டத்தில் ரீசார்ச் செய்யும் போது, அவர்களுக்கு கூடுதலாக 10 ஜி.பி டேட்டா வழங்கப்படும். மேலும், பேடிஎம் வவுச்சர்களும் வழங்கப்படுகிறது.
முன்னதாக ஜியோனி நிறுவனமானது, ஏ- சீரியசில் இரண்டு ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. ஜியோனி ஏ1 ஸ்மார்ட்போனானது ரூ.19,999 என்றும் ஜியோனி ஏ1 ப்ளஸ் ரூ.26,999 என்ற விலையிலும் தற் விற்பனையில் உள்ளது.