டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்தியாவில் ஆசிய கோப்பை 2023 மற்றும் ODI கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமத்தைப் பெற்றுள்ளது. அதன்படி இந்தப் போட்டிகளை மொபைல் வெர்ஷனில் இலவசமாக காணலாம். இதைச் செய்வதன் மூலம், நிறுவனம் மீண்டும் லாபம் ஈட்ட விரும்புகிறது, அதே போல் தனது பழைய பயனர்களுடன் இணைய விரும்புகிறது.
ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, டிஸ்னி + ஹாட்ஸ்டார் கடந்த ஆண்டு அதிக பயனர்களைக் கொண்டிருந்தது, ஆனால் மார்ச் 2022-க்குப் பிறகு, பயனர்கள் வெளியேறினர், இதனால் நிறுவனத்திற்கு 41.5 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலாண்டில் பயனர்கள் வீழ்ச்சியடைந்து, நிறுவனம் லாபத்திற்கு திரும்புவதற்கு அழுத்தம் கொடுத்தது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒருவேளை இந்தியர்கள் தங்கள் பிரீமியம் உள்ளடக்கத்திற்கு தொடர்ந்து குழுசேர்வார்கள் என்று கருதியது. ஆனால், இது நடக்கவில்லை. கிரிக்கெட் ஒளிபரப்பை நிறுத்திய போது இந்தியர்கள் சந்தாக்களை நிறுத்தினர். அத்தகைய சூழ்நிலையில், டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு இப்போது ஒரே ஒரு விருப்பம் இருந்தது. அது இலவச கிரிக்கெட்டை நேரடியாக ஸ்ட்ரீம் செய்வது ஆகும்.
இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கிரிக்கெட் போட்டியின் போது பார்வையாளர்களின் எண்ணிக்கை 50 மில்லியனாக இருக்கும் என்று நம்புகிறது. இது நடந்தால், முகேஷ் அம்பானியின் ஜியோ சினிமா தளத்தில் முதல் முறையாக ஐ.பி.எல் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட போது இருந்த பார்வையாளர்களை விட 56 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று நிறுவனம் கூறியது.
ஐ.பி.எல் 2023 போட்டிக்கான டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமத்தை முகேஷ் அம்பானியின் ஜியோ சினிமா முதல் முறையாகப் பெற்று அனைத்து நெட்வெர்க் பயனர்களுக்கும் போட்டிகளை இலவசமாக ஸ்ட்ரீம் செய்தது. இதனால் ஜியோ சினிமா பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இலசமாக ஸ்ட்ரீமிங் செய்வதால் ஜியோ சினிமா தனது பயனர்களை இழக்க வாய்ப்புள்ளது.
2023-க்கு முன்னதாக, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கிரிக்கெட் போட்டிகளை தனது சந்தாதாரர்களுக்கு ஒளிப்பரப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“