Advertisment

எலான் மஸ்க் அடுத்த அதிரடி: ட்விட்டர் பதிவு படிக்க கட்டுப்பாடு விதிப்பு; பயனர்கள் அதிருப்தி

ட்விட்டரில் பயனர்கள் பதிவுகளைப் படிக்க சி.இ.ஓ எலான் மஸ்க் கட்டுப்பாடு விதித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Twitter

Twitter

டேட்டா ஸ்கிராப்பிங் மற்றும் சிஸ்டம் மேனிப்புலேசன் ஆகியவற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த ட்விட்டர் பதிவுகளைப் படிக்க கட்டுப்பாடு விதிப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

Advertisment

அதன்படி, இனி ப்ளூ டிக் பயனர்கள் மட்டுமே ட்விட்டரை முழுமையாக பயன்படுத்த முடியும். எலான் மஸ்க் வெளியிட்ட ட்விட் பதிவில், ப்ளூ டிக் பயனர்கள் ஒரு நாளைக்கு 6000 பதிவுகளைப் படிக்க முடியும். மற்ற பயனர்கள் 600 பதிவுகளைப் படிக்க முடியும். புதிய Unverified பயனர்கள் ஒரு நாளைக்கு 300 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

எனினும் இது தற்காலிக நடவடிக்கை என்றும் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பின் இந்த வரம்பு அதிகரிக்கப்படும் எனக் கூறியுள்ளார். அப்போது ப்ளூ டிக் பயனர்கள் 10,000 பதிவுகளைப் படிக்கலாம் என்றும் ப்ளூ டிக் பெறாத பயனர்கள் 1000 பதிவுகளையும், புதிய பயனர்கள் 500 பதிவுகளையும் படிக்க முடியும் என்று மஸ்க் கூறியுள்ளார்.

எனினும் எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பு பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் பதிவுகளைப் படிக்க கூட கட்டுப்பாடா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக, நேற்று இரவு உலகம் முழுவதும் திடீரென ட்விட்டர் தளம் முடங்கியது. ட்விட் பதிவிட முடியாமல் பயனர்கள் தவித்தனர். பல்வேறு பயனர்கள் இது குறித்து புகார் தெரிவித்தனர். பின்னர் சிறிது நேரங்களில் ட்விட்டர் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதற்கிடையில் எலான் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Twitter Elon Musk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment