Advertisment

அக்.29-ல் பகுதி சந்திர கிரகணம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்

Partial lunar eclipse on October 29: அக்டோபர் 29-ம் தேதி இந்தியாவில் பகுதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது ஒரு அரிய நிகழ்வாகும். இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணம் 2025-ல் தான் நிகழும்.

author-image
sangavi ramasamy
New Update
partial lunar eclipse .jpg

அக்டோபர் 29-ம் தேதி அரிய பகுதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது இந்தியாவில் நிகழக் கூடிய கிரகணமாகும். சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 28-29) அதிகாலையில் இடைப்பட்ட நேரத்தில்  நிகழும் ஒரு பகுதி சந்திர கிரகணம் இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் காண முடியும். 

Advertisment

சனிக்கிழமை நள்ளிரவில் நிலவு பெனும்பிராவில் நுழையும் என்றாலும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தான் அம்ப்ரல் பேஃஸ் (umbral phase) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திர கிரகணம் சூரிய கிரகணம் போல் அரிதானது அல்ல. நாசாவின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஒன்று அல்லது இரண்டு முறை அல்லது அதற்கு மேற்பட்ட முறை நிகழும்.  பூமி, சந்திரன் மற்றும் சூரியன் ஆகியவை நேர்கோட்டில் நின்று நிழல் விளையாட்டு விளையடும் போது அதை நாம் கிரகணம் என்று அழைக்கிறோம்  3 வெவ்வேறு வகையான சந்திர கிரகணங்கள் உள்ளன. அவை முழு சந்திர கிரகணம், பகுதி மற்றும் பெனும்பிரல் சந்திர கிரகணம் ஆகும். 

அக்.29-ல் நிகழும் பகுதி சந்திர கிரகணம் பற்றி 10 தகவல்கள்

1. கிரகணம் எப்போது?

பகுதி சந்திர கிரகணம் சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 28-29) அதிகாலையில் இடைப்பட்ட நேரரத்தில் நிகழும்.

2. பகுதி சந்திர கிரகணம் ஏற்படும் நேரம்?

கிரகணம் சுமார் 1 மணி 19 நிமிடங்கள் நிகழும். இந்த கிரகணத்தின் அம்ப்ரல் கட்டம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.05மணிக்கு மணிக்கு தொடங்கி 2.24 மணிக்கு முடிவடையும். 

3. எங்கெல்லாம் பார்க்க முடியும்? 

பகுதி கிரகணம் இந்தியாவின் அனைத்து இடங்களிலிருந்தும் தெரியும். மேற்கு பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கிழக்கு தென் அமெரிக்கா, வடகிழக்கு வட அமெரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய பிராந்தியத்திலும் இது தெரியும்.

4. சந்திர கிரகணம் என்றால் என்ன?

முழு நிலவு நாளில்  சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் போதும், மூன்று கிரகங்களும் ஒரே நேர் கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

5. முழு மற்றும் பகுதி சந்திர கிரகணத்திற்கும் என்ன வித்தியாசம்?

முழு நிலவும் பூமியின் கீழ் நிழலில் மறையும் போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது, அதே நேரத்தில் பகுதி  சந்திர கிரகணத்தின் போது நிலவின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும்போது நிகழ்கிறது. 

பகுதி கிரகணங்களின் போது, ​​பூமியின் நிழல் சந்திரனின் பக்கத்தில் விழுவதால் மிகவும் இருட்டாகத் தோன்றும். இருப்பினும் இது பூமியிலிருந்து மக்கள் பார்க்கும் போது வேறு விதமாக தெரியலாம். சூரியன், பூமி மற்றும் சந்திரன் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பது பொறுத்து இது தெரியும்.

6. பகுதி சந்திர கிரகணத்தின் போது என்ன நடக்கும்?

பகுதி கிரகணங்களின் போது, ​​பூமியின் நிழல் பொதுவாக சந்திரனின் பக்கத்தில் விழுவதால் மிகவும் இருட்டாகத் தோன்றும்.

7.   வெறும் கண்களால் பார்க்கலாமா? 

சூரிய கிரகணம் போலல்லாமல், சந்திர கிரகணங்களை வெறும் கண்களால் பார்க்கலாம். கிரகணத்தை நன்றாகப் பார்க்க தொலைநோக்கி அல்லது பைனாக்குளர் பயன்படுத்தலாம்.  

8. சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும்?

கிரகணத்தை நேரடியாகப் பார்ப்பது  முற்றிலும் பாதுகாப்பானது. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நிலவை பார்க்கலாம். நீங்கள் விரும்பும் அனைத்தையும் உண்ணலாம். கர்ப்பிணிப் பெண்களுக்கும், முதியவர்களும் இந்த நேரத்தில் சாப்பிடலாம்.

9. அடுத்த சந்திர கிரகணம் எப்போது?

இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாக இருக்கும். அடுத்த சந்திர கிரகணம் செப்டம்பர் 7, 2025 அன்று இந்தியாவில் தெரியும்.

10. இந்தியாவில் கடைசி சந்திர கிரகணம் எப்போது தோன்றியது?

இந்தியாவில் முன்பு நவம்பர் 8, 2022 அன்று தோன்றியது. அது முழு சந்திர கிரகணமாக இருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lunar Eclipse moon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment