/tamil-ie/media/media_files/uploads/2017/08/TRAI.jpg)
டெலிபோன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 0.49 சதவீதம் உயர்ந்துள்ளது என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ( டிராய்) தெரிவித்துள்ளது.
டெலிபோன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை, மே மாத இறுதியில் 1,204.98 மில்லியன் சந்தாதாரர்கள் இருந்த நிலையில், ஜூன் மாத இறுதியில் 1,210.84 மில்லியனாக அதிகரித்துள்ளது. குறிப்பாக நகர்புறங்களில் 697.06 மில்லியனில் இருந்து 700.96 மில்லியனாகாக அதிகரித்துள்ளது.
இதேபோல, கிராமப்புறங்களில் டெலிபோன் பயன்படுத்தும் சந்தாதாரர்களும் அதிகரித்துள்ளனர். கிராமபுறங்களில் 507.92 மில்லியனில் இருந்து 509.88 மில்லியனாக அதிகரித்துள்ளது. டிராய் வெளியிட்டுள்ள இந்த தகவலின் படி நகர்புறங்களில் டெலிபோன் பயன்படுத்தும் சந்தாதாரர்கள் 0.56 சதவீதமும், கிராமப்புறங்களில் 0.39 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.எம்., சி.டி.எம்.ஏ., மற்றும் எல்.டி.இ போன்ற வயல்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் இந்த இடைப்பட்ட காலத்தில் அதிகரித்துள்ளது. வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை, மே மாத இறுதியில் 1,180.82 மில்லியனாக இருந்த நிலையில், ஜூன் மாத இறுதியில் 1,186.84 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஜூன் மாதத்தில் மட்டும் 5.55 மில்லியன் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பர் போர்டபிலிட்டிக்காக (எம்.என்.பி) கோரிக்கை விடுத்துள்ளனர். மே மாத இறுதியில் எம்.என்.பி-க்கு கோரிக்கை விடுத்தவர்களின் எண்ணிக்கை 283.09 மில்லியனாக இருந்த நிலையில், ஜூன் மாத இறுதியில் 288.97 மில்லியனாக அதிகரித்துள்ளது என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.