பட்டுக்கு பெயர்போன காஞ்சிபுரம் பக்த கோடிகளின் திரளில் 48 நாட்களாக திணறி நின்றது. அத்திவரதர் தரிசனத்திற்காக வந்த கூட்டம் அது. நாட்டின் முதல் குடிமகன் முதல் நயன்தாரா வரை விஐபி தரிசனங்களுக்கும் பஞ்சமில்லை.
இன்னும் 40 ஆண்டுகள் கழித்து தான் இந்த நிகழ்வை பார்க்க முடியும் என்கிற ஆர்வம் உந்தித் தள்ளியதால் சாமானிய பக்தர்களும் அணிவகுத்தனர். ஒரு கோடிக்கும் அதிகமான கூட்டம் மொத்தம் கூடியதாக சொல்கிறது புள்ளிவிவரம். இந்த நிகழ்வில் மறக்கமுடியாத தருணங்கள் இங்கே வீடியோ தொகுப்பாக: