பெண்களை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனுஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். நாசர், பார்த்திபன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மலையாள இயக்குநரான எம்.ஏ.நிஷாத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கேணி’. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு, தாஸ் ராம்பாலா வசனம் எழுதியிருக்கிறார். தமிழ்நாடு – கேரள எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
Advertisment
இந்த நாட்டின் முக்கியப் பிரச்னையாக இருக்கக்கூடிய தண்ணீர் தட்டுப்பாடு குறித்து விரிவாகப் பேசுகிறது ‘கேணி’ படம். பெண்களை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனுஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். நாசர், பார்த்திபன் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க, இவர்களுடன் சேர்ந்து ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.