Advertisment

புத்தக கண்காட்சிக்கு வருகை தந்த கவிஞர் வைரமுத்து

ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சியை சிறப்போடு நடத்தி வரும் பபாசியின் தலைவர் மற்றும் குழுவிற்கு தன் வாழ்த்துகளை தெரிவித்தார்.

author-image
Janani Nagarajan
Mar 01, 2022 09:15 IST

Advertisment

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் 45ஆவது புத்தக கண்காட்சிக்கு கவிஞர் வைரமுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை வருகை தந்துள்ளார்.

வாசகர்களையும் ரசிகர்களையும் சந்தித்த கவிஞர் வைரமுத்து, அவர்கள் வாங்கிய புத்தகங்களில் கையொப்பமிட்டார்.

புத்தக கண்காட்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் வாசகர்களின் வருகை அதிகரித்து கொண்டிருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைவதாக கூறினார். மேலும், ஒவ்வொரு ஆண்டும் பொறுப்போடும் சிறப்போடும் நடத்தி வரும் பபாசியின் தலைவர் மற்றும் குழுவிற்கு தன் வாழ்த்துகளை தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Chennai Book Fair #Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment