ஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தின் ஒரு நடவடிக்கையாக சென்னையில் பெடஸ்டிரியன் பிளாசா கொண்டு வரப்பட்டிருக்கிறது இதற்கு சிலர் வரவேற்பு தந்துள்ளனர். சிலருக்கு இந்த திட்டம் கொஞ்சம் பிடிக்கவில்லை. இதுகுறித்து நாங்கள் பொதுமக்களிடம் கேட்டபோது வணிகர் வளாகத்திற்கு ஏறிச் செல்வது மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது. மேலும் முறையான பார்க்கிங் வசதி இல்லாததால் எங்கே கார்களை நிறுத்துவது குறித்து நிறைய குழப்பம் நிலவுகிறது என்று கூறினர். வயதானவர்கள் மற்றும் கர்பிணிகளுக்கு இந்த ஷட்டில்கார் மிகவும் உதவிகரமாக இருப்பதாக கூறுகின்றனர். ஒருவழிச்சாலை பலருக்கு பெரும் தலைவலியையும் உருவாக்கியுள்ளது .
நடைபாதைக் கடைகள் மக்கள் மத்தியில் முன்பு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால் தற்போது அவர்கள் வளாகத்திற்குள் விற்பனையை தொடர அறிவுறுத்தப்பட்டிருக்கின்றார்கள். அதனால் அவர்கள் இந்த திட்டம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர் .
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.