சிறையா? சொர்க்கமா?: சுடிதாருடன் வலம் வரும் சசிகலாவின் புதிய வீடியோ

தில், சசிகலா கையில் ‘கைப்பை’ ஒன்றை வைத்துக்கொண்டு வெளியே செல்ல தயாராகுவது போல் உள்ளது. அறையின் ஓரத்தில் இளவரசி சிவப்பு நிற சேலையுடன் நின்றுகொண்டிருக்கிறார்.

தில், சசிகலா கையில் ‘கைப்பை’ ஒன்றை வைத்துக்கொண்டு வெளியே செல்ல தயாராகுவது போல் உள்ளது. அறையின் ஓரத்தில் இளவரசி சிவப்பு நிற சேலையுடன் நின்றுகொண்டிருக்கிறார்.

author-image
Nandhini v
New Update

சசிகலாவுக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Advertisment

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டதாக ஆரம்பத்தீருந்தே குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில், அண்மையில் சசிகலா அறையில் சமையலறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் அவருக்கு சிறையில் எந்தவொரு சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என சிறைத்துறை மறுப்பு தெரிவித்து வந்தது. இதனிடையே, பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும், இந்த சலுகைகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை டிஐஜி-யாக இருந்த ரூபா குற்றம் சாட்டினார். கர்நாடக உள்துறை செயலர், ஊழல் தடுப்புத்துறை இயக்குநர், காவல் துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு புகார் கடிதம் அனுப்பிய அவர், ஊடகங்களிலும் இது குறித்து பேசினார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உயர்நிலை விசாரணை குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு ஐந்து அறைகள் ஒதுக்கப்பட்டதாக தனியார் ஆங்கில தொலைக்காட்சி மற்றும் சில கன்னட தொலைக்காட்சிகளில் வீடியோ திங்கள் கிழமை வெளியானது.

Advertisment
Advertisements

அதில், சசிகலா தூங்குவதற்கு வசதியாக ஒரு அறையும், தனி சமையல் அறையும், அவர் பயன்படுத்தும் பொருட்கள் வைக்க ஒரு அறையும், அவரை சந்திக்க சிறைக்கு வருபவர்களுடன் அவர் பேசுவதற்காக பார்வையாளர் அறையும் மற்றும் உடற்பயிற்சி செய்ய மற்றொரு அறையும் என மொத்தம் 5 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அந்த அறைகள் வெளியே தெரியாதபடி முன்பக்க கதவுகளில் துணி போட்டு மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறையில் சசிகலா நைட்டி அணிந்துகொண்டு, டி.ஐ.ஜி. ரூபா தன் அறையில் சோதனை நடத்தியதாக யாருடனோ கூறிக்கொண்டிருப்பது போல் வீடியோ செவ்வாய் கிழமை வெளியானது.

இந்த நிலையில், செவ்வாய் கிழமை சசிகலா சுடிதார் அணிந்துகொண்டு சிறை அறையில் சுதந்திரமாக வலம்வருவது போன்ற காட்சிகள் கன்னட தொலைக்காட்சிகளில் வெளியாகின. அதில், சசிகலா கையில் ‘கைப்பை’ ஒன்றை வைத்துக்கொண்டு வெளியே செல்ல தயாராகுவது போல் உள்ளது. அறையின் ஓரத்தில் இளவரசி சிவப்பு நிற சேலையுடன் நின்றுகொண்டிருக்கிறார். அவருடன் சசிகலா உரையாடுவது போன்ற காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bengaluru Parappana Agraharajail

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: