2022 ஆம் ஆண்டில் Covid-19 பாதிப்புகள் குறைந்திருந்தாலும், பயம், நோய், விழிப்புணர்வு இல்லாமை மற்றும் தடுப்பூசிகள் பற்றிய தவறான தகவல்கள் ஆகியவை விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்குத் தடுப்பூசி எடுக்கத் தயக்கத்தை ஏற்படுத்தியது (Vaccine Hesitants). தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுப்பூசி போடுவதற்கு மேலும் மக்களை ஊக்குவிக்கவும், MOMENTUM Routine Immunization Transformation and Equity Project தொடங்கப்பட்டது. USAID ஆல் ஆதரிக்கப்பட்டு, ஜான் ஸ்னோ (JSI) இந்தியா பிரைவேட் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவின் 18 மாநிலங்களில் உள்ள பல விளிம்பு நிலை மக்களுக்குத் தடுப்பூசி போட அரசாங்கத்திற்கு உதவி வருகிறது.