சாலையோர கடைகளில் சாப்பிடுவது, காரசாரமான துரித உணவு எடுத்துக் கொள்வது என்பது நகரங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த துரித உணவுகளை எடுத்துக்கொள்வதில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என பசுக்கள் கூறுகூது போல இருக்கிறது இந்த வீடியோ.
டெல்லியில் உள்ள சாலையோர கடையில் ஒருவர் அங்குள்ள மாட்டிற்கு துரித உணவுகளை அளிக்கிறார். இதை விரும்பி உண்ணும் அந்த மாடுகளை பார்க்கும் போது, சுவையில் இன்னும் வேண்டும் வேண்டும் என எண்ணுவது அப்படியே தெரிகிறது. சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ வைரல் அடித்து வருகிறது.