12 வருடத்திற்கு முன்பு வண்ணாரப்பேட்டையில் உள்ள கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகத்தை வேடிக்கை பார்க்கச் சென்ற திருநங்கை ரசிகா, அவரின் ஆன்மிக ஆர்வத்தால் கிடைத்த வாய்ப்பு மூலம் அதே கோவிலில் 12 வருடமாக பூசாரியாக இருக்கிறார். சென்ற வருடம் கிருஷ்ணமாரிஅம்மன் கோவிலுக்கு ரசிகாவின் தலைமையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அவரின் வாழ்க்கை வரலாறும், கோவில் பணிகளையும் இந்த காணொளியில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.