செல்ஃபோன் முக்கியம்தான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், நம் உயிரையே பணயம் வைக்கும் அளவுக்கு செல்ஃபோன் முக்கியமில்லை. என்னங்க, யாராவது செல்ஃபோனுக்காக உயிரையே பணயம் வைப்பார்களா என்கிறீர்களா? ஆமாம், சீனாவில்தான் ஒரு பெண் செல்ஃபோனுக்காக உயிரையே துறக்க துணிந்திருக்கிறார் ஒரு பெண்.
சீனாவின் எர்ஹாய் ஏரியில் கப்பலில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணின் செல்ஃபோன், தவறுதலாக ஏரியில் விழுந்துவிட்டது. உடனேயே அந்த பெண் என்ன செய்தார் தெரியுமா? ஏரியில் குதிக்க முயற்சி செய்கிறார்.
நல்ல வேளை, கப்பலில் இருந்த பாதுகாவலர்கள் மற்றும் பார்வையாளர்கள் அப்பெண்ணை, ஏரியில் குதிக்கவிடாமல் காப்பாற்றிவிட்டனர். ஆனால், அப்பெண் குதித்தே தீருவேன் என அடம்பிடிக்கிறார். நல்ல வேளை எப்படியோ விடாப்பிடியாக அவரை பாதுகாவலர்கள் மீட்டனர்.
அங்கிருந்தவர்கள் இதனை செல்ஃபோனில் பதிவு செய்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us