Advertisment

கோவை பெரிய தடாகம் பகுதியில் கோவிலுக்குள் புகுந்த 2 காட்டு யானைகள்: வைரல் வீடியோ

தடாகம், பெரிய தடாகம் பகுதியில் தற்போது ஏராளமான யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore

Coimbatore two wild elephant enters inside temple viral video

கோவை  அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் அனுபவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் புகுந்த வீடியோ இப்போது வைரல் ஆகியுள்ளது.

Advertisment

கோவை மாவட்டம் மாங்கரை அடுத்துள்ள தடாகம், பெரிய தடாகம் பகுதியில் தற்போது ஏராளமான யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது.

கோடை வெயில் தணிந்த நிலையில் கேரள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் தமிழக வனப் பகுதியை ஒட்டியுள்ள மாங்கரை பெரிய தடாகம் ஒட்டியுள்ள வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளது.

இந்த யானைகள் மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை மாலை சுமார் 5.30  மணி அளவில் இரண்டு காட்டு யானைகள், வனப்பகுதியில் இருந்து வெளியேறி அனுபவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லக்கூடிய மலைப் பாதையை கடந்து அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றது. இதனை அங்கிருந்து அவர்கள் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர்.

இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

மாலை நேரம் என்பதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி இந்த யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்திருக்கலாம். யானை நடமாட்டத்தால் பக்தர்கள் மாலை 4 மணிக்கு மேல் மலைப் பாதை வழியாக நடந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment