மருதமலை கோவிலில் பக்தர்கள் செல்லும் வழியில் யானை கூட்டம் நடந்து சென்ற செல்போன் காட்சிகள் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் மருதமலை, தொண்டாமுத்தூர், தடாகம் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இதையும் படியுங்கள்: மனிதர்கள் இடையே மறைந்திருக்கும் 3 ஆந்தைகள்; 7 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்!
இந்நிலையில் மருதமலை மற்றும் பெரிய தடாகம் பகுதியில் உள்ள அனுவாவி சுப்பிரமணியர் கோவிலுக்கு நேர கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்துள்ளனர். மேலும், இரவு நேரங்களில் யாரும் வெளியில் வர வேண்டாம் எனவும் வனத்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். மருதமலை பகுதியில் காட்டு யானைகள் நடமாடும் வீடியோ காட்சிகளும் அண்மை காரணமாக அதிகமாக வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் மருதமலை கோவிலில் பக்தர்கள் செல்லும் வழித்தடத்தில் ஆறு காட்டு யானைகள் கடந்து செல்லும் செல்போன் காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு காட்டு யானைகளை வனப்பகுதிகள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil