பெரும் பலம் கொண்ட இரண்டு யானைகள் சண்டையிட்டு பார்த்திருக்கிறீர்களா? அப்படி காட்டில் 2 யானைகள் சண்டையிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், இந்த யானைகள் நிஜமாக சண்டைபோடுகிறதா இலை விளையாட்டுக்கு சண்டை போடுகிறதா என்று கண்டுபிடிப்பதுதான் கடினமாக இருக்கிறது.
பொதுவாக வனவிலங்குகள் அந்த இனத்திற்குள்ளாகவே சண்டையிட்டுக்கொள்ளும் நிகழ்வுகள் நடப்பது உண்டு. சிங்கமும் சிங்கமும் அதிகார எல்லையை வரையறுக்க சண்டையிட்டுக்கொள்வது உண்டு. அதே போல, இரண்டு புலிகள் தங்கள் அதிகார எல்லையை தீர்மாணிக்க சண்டையிட்டுக்கொள்வது உண்டு. சில நேரங்களில் விளையாட்டாகவும் சண்டையிட்டு பலப்பரிட்சை செய்வது உண்டு.
அந்த வரிசையில் காட்டில் பெரும் பலம் கொண்ட 2 யானைகள் சண்டையிடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Elephants on a friendly brawl. Sharpening their skills during lockdown at Kruger.
VC- KNP pic.twitter.com/G1cysfNYwR
— Susanta Nanda IFS (@susantananda3) April 20, 2020
வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா டுவிட்டரில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், 2 யானைகள் கடுமையாக சண்டைப்போடுகின்றன. என்ன இந்த யானைகள் இவ்வளவு மூர்க்கமாக சண்டைபோடுகின்றன என்று பீதியுடன் பார்க்கும்போது, இரண்டு யானைகளும் உண்மையாக சண்டைப் போடுவதாகத் தெரியவில்லையே என்ற ஐயமும் ஏற்படுகிறது. இப்படி மல்லு கட்டுகிறார்களே இது நிஜ சண்டையா விளையாட்டு சண்டையா என தெரியாமல் வீடியோவைப் பார்க்கும் பலரும் குழம்பிப் போகிறார்கள்.
இந்த வீடியோ பற்றி ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், “லாக்டவுன் காலத்தில் குருகெரில் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள யானைகள் ஃபிரண்ட்லியாக சண்டையிடுகின்றன.” என்று கூறி பார்வையாளர்களின் சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்த 2 யானைகள் எப்படி சண்டையிடுகிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள். இப்போது கூறுங்கள் இது நிஜ சண்டையா? விளையாட்டு சண்டையா?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.