New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/10/markzuck.jpg)
ஃபேஸ்புக் மக்களை ஒன்றிணைப்பதற்கு பதிலாக அவர்களை பிரித்துவிட்டது எனவும், அதற்காக தான் மன்னிப்பு கோருவதாகவும் மார்க் சூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் மக்களை ஒன்றிணைப்பதற்கு பதிலாக அவர்களை பிரித்துவிட்டது எனவும், அதற்காக தான் மன்னிப்பு கோருவதாகவும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் துவங்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், யூதர்களின் வருடாந்திர புனித தினத்தையொட்டி, அதன் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க் தன் முகநூல் பக்கத்தில் ஒன்றை பதிவிட்டார்.
அதில், ஃபேஸ்புக் மக்களை இணைப்பதற்கு பதிலாக அவர்களை பிரித்துவிட்டது எனவும், அதற்காக தான் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், தன்னை மேம்படுத்திக்கொண்டு சரியாக செயல்பட முயற்சிக்கிறேன் எனவும் தன் பதிவில் மார்க் சூக்கர்பெர்க் குறிப்பிட்டார்.
ஃபேஸ்புக்கில் விளம்பரங்கள் மூலம் தவறான மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக உலக நாடுகள் புகார் கூறி வந்தன. கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது, அமெரிக்கா வாக்காளர்களை குறிவைத்து ரஷ்யா 3000 விளம்பரங்களை வெளியிட்டது. இது, அத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உலக நாடுகளின் தொடர் புகாரையடுத்து, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.