Advertisment

வாட்ச் பில்லு கேட்டது குத்தமாடா? செந்தில் பாலாஜி போட்டோஸ் வைரல்

செந்தில் பாலாஜியின் இந்த நிலைமைக்கு அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் பில் கேட்டதுதான் காரணம் என்று கூறும் விதமாக, ஒரு வாட்ச் பில்லு கேட்டது குத்தமாடா? என்று செந்தில் பாலாஜி உடல் மெலிந்த புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Senthil Balaji latest tiered ang aging photo goes viral, Annamalai Rafael watch bill, BJP trolls senthil balaji photo, வாட்ச் பில்லு கேட்டது குத்தமாடா? செந்தில் பாலாஜி போட்டோஸ் வைரல், ரஃபேல் வாட்ச் பில், அண்ணாமலை, பாஜக, DMK, Minister Senthil Balaji latest tiered ang aging photo goes viral, Annamalai Rafael watch bill

செந்தில் பாலாஜி போட்டோஸ் வைரல்

அமலாக்கத் துறை கைதைத் இதய அறுவை சிகிச்சைக்குப் பின், மெலிந்த தோற்றத்தில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் புகைப்படத்தை பகிர்ந்து, வாட்ச் பில்லு கேட்டது குத்தமாடா? என்று பா.ஜ.க ஆதரவு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Advertisment

அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க அரசில் முக்கிய இலாக்காவான மின் துறை அமைச்சராக வலம் வந்தார். பா.ஜ.க ஓரளவு பலமாக உள்ள கோவையில் செந்தில் பாலாஜி தி.மு.க-வை பலப்படுத்தி வந்தார்.

அதே நேரத்தில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வந்தார். 2 ஆடுகள் வைத்திருக்கும் எளிய விவசாயி என்று கூறிய அண்ணாமலைக்கு விலை உயர்ந்த ரஃபேல் வாட்ச் எப்படி வந்தது என்று தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பலரும் கேள்விகளை எழுப்பினர். இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து ரஃபேல் வாட்ச் வாங்கியதற்கான ரசீதை வெளியிட முடியுமா என்று கேள்வி எழுப்பினார். செந்தில் பாலாஜியின் இந்த கேள்வி பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் களத்தில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. பின்னர், அண்ணாமலை ரஃபேல் வாட்ச்சை நேரடியாக வாங்காமல் வேறொருவரிடம் இருந்து வாங்கியதற்கான பில்லை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கிக்கொண்டு மோசடி செய்தது தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்தது.

பின்னர், அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. இதனால், நெஞ்சுவலி ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாக மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டு மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற உத்தரவு பெற்று விசாரணை செய்தது. தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் உள்ளார். அவர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை போலீசார் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்பட வெளியாகி வைரலாகி வருகிறது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவதற்கு முன்பு, எப்போதும் புத்துணர்ச்சியுடன் இளமையாக இருந்த செந்தில் பாலாஜியின் தோற்றம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி சோர்வான முகத் தோற்றத்தில் மெலிந்துபோய் இருக்கும் புகைப்படம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

செந்தில் பாலாஜி சோர்ந்து போய், உடல் மெலிந்து சற்று முதுமை அடைந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்த பா.ஜ.க ஆதரவு நெட்டிசன்கள் ஒரு வாட்ச் பில்லு கேட்டது குத்தமாடா என்று கேட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

சில நெட்டிசன்கள் எப்படி இருந்த செந்தில் பாலாஜி இப்படி ஆகிவிட்டார் என்று நகைச்சுவை நடிகர் விவேக்கின் நகைச்சுவை வரிகளைக் குறிப்பிட்டு மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

செந்தில் பாலாஜியின் இந்த நிலைமைக்கு அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் பில் கேட்டதுதான் காரணம் என்று கூறும் விதமாக, ஒரு வாட்ச் பில்லு கேட்டது குத்தமாடா? இனிமே யார்கிட்டேயும் டைம் கூட கேட்கவே மாட்டேன் என்று செந்தில் பாலாஜியின் கலையிழந்த உடல் மெலிந்த புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

V Senthil Balaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment