shocking video: 4 ஆவது மாடியிலிருந்து தவறி விழ இருந்த குழந்தையை 1 நொடியில் அவரின் தாய் காப்பாற்றிய வீடியோ இன்றைய வைரல் வீடியோ லிஸ்டில் முதலிடத்தை பெற்றுள்ளது.
Advertisment
தாயின் அன்புக்கு இணை இவ்வுலகில் வேறு எதுவுமில்லை. குழந்தை பருவம் தொடங்கி நமக்கு புத்தி தெரிந்து வளர்வது வரை தாயின் பராமரிப்பு குழந்தைக்கு கிடைக்கும் வரம் போன்றது. தற்செயலாக குழந்தைக்கு ஏதாவது ஆபத்து என்றால் தாயானவள் தனது உயிரை பணயம் வைத்து குழந்தை காப்பாற்றுவாள்.
அப்படியொரு வீடியோவை தான் இப்போது நீங்கள் பார்க்க உள்ளீர்கள். கொலம்பியாவில் உள்ள மெடிலின் என்ற நகரில் சில தினங்களுக்கு முன்பு பெண் ஒருவர் தனது குழந்தையை அழைத்துக் கொண்டு கொலோனியல் என்ற அடுக்குமாடி காட்டிடத்தில் இருக்கும் அலுவலத்திற்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த பால்கனியை எட்டிப் பார்த்த குழந்தை தவறுதலாக திடீரென்று கீழே விழுந்தது. இதனை பார்த்த தாய் நொடியும் தாமதிக்காமல் தரையில் விழுந்து குழந்தையை தனி ஒரு ஆளாக நின்று பிடித்து குழந்தையை சிறு காயங்கள் இன்றி பத்திரமாக மீட்டார்.
இதைப்பார்த்த அருகில் இருந்த மற்றவர்கள் குழந்தையை மீட்க உதவினர். அதிர்ஷ்டவசமாக தாயும், குழந்தையும் எவ்வித காயமும் இல்லாமல் உயிர்தப்பினர். இவை அனைத்தும் அங்கு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குழந்தையை துணிச்சலாக காப்பாற்றிய பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.