ஆசிட் வீச்சு தாக்குதலால் துவண்டு விடவில்லை: குணமடைந்த புகைப்படத்தை பகிர்ந்து நம்பிக்கை அளித்த பெண்

ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான விளம்பர மாடல் ஒருவர், தான் குணமாகி வரும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அது தற்போது வைரலாகி வருகிறது.

ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான விளம்பர மாடல் ஒருவர், தான் குணமாகி வரும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அது தற்போது வைரலாகி வருகிறது.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆசிட் வீச்சு தாக்குதலால் துவண்டு விடவில்லை: குணமடைந்த புகைப்படத்தை பகிர்ந்து நம்பிக்கை அளித்த பெண்

ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான விளம்பர மாடல் ஒருவர், தான் குணமாகி வரும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அது தற்போது வைரலாகி வருகிறது. அது அவருடைய தன்னம்பிக்கையையும், நேர்மறையான குணநலத்தையும் காட்டுவதாக பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

விளம்பர மாடல் ரேஷம் கான், லண்டனில் தனது 21-வது பிறந்தநாளை கொண்டாடும்போது ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளானார். கடந்த ஜூன் மாதம் 21-ஆம் தேதி, ரேஷம் கான் தன் உறவினர் ஜமீல் முக்தருடன் பிறந்தநாள் கொண்டாடினார். இதன்பின், காரில் இருவரும் சென்று கொண்டிருக்கும்போது, இருவரும் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதில், ரேஷம் கானின் முகம் மற்றும் தோள்பட்டையில் பெரும் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவருடைய உறவினர் ஜமீல் முக்தர் இன்னும் கோமா நிலையில் உள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு தன் வலைப்பதிவில் எழுதிய ரேஷம் கான், “என் உடலில் தற்போது சில பிங்க் மற்றும் வெள்ளை நிறத்திலான வடுக்கள் இருக்கின்றன. அவை விரைவிலேயே என் முந்தைய நிறத்திற்கு மாறிவிடும். என்னால் என் வாயை திறக்க முடியவில்லை. அது இறுக்கமாக இருப்பதாக உணர்கிறேன். திரும்பவும் நான் பழைய நிலைக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது”, என குறிப்பிட்டார்.

இதையடுத்து, கடந்த பக்ரீத் பண்டிகையன்று தான் குணமான புகைப்படத்தை பகிர்ந்து தன் நண்பர்கள், நல விரும்பிகள், சமூக வலைத்தளங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் ரேஷம் கான். தன் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டார்.

Advertisment
Advertisements

இதனால் அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நம்பிக்கை மற்றும் ஊக்கத்தையும் அளித்து வருகின்றனர். அதில் ஒரு பதிவில், “நீங்கள் அற்புதமாக இருக்கிறீர்கள். நீங்கள் குணமானதைப் பார்த்து நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம்.”, என குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றொரு பதிவில், “உங்களுடைய உறவினரும் முழு நலத்தைப் பெறா வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.”, என பதிவிடப்பட்டிருந்தது.

London

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: