இடிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்... நூலிலையில் தப்பித்த 50 பேர் - ஷாக்கிங் வீடியோ

கட்டிடத்தில் வசிக்கும் 50க்கும் மேற்பட்டோர் நூலிழையில் உயிர் தப்பித்தனர். கட்டிடம் இடிந்து விழும் காட்சி சமூக வலைதளத்தில் வெகமாக பரவி வருகிறது.

கட்டிடத்தில் வசிக்கும் 50க்கும் மேற்பட்டோர் நூலிழையில் உயிர் தப்பித்தனர். கட்டிடம் இடிந்து விழும் காட்சி சமூக வலைதளத்தில் வெகமாக பரவி வருகிறது.

author-image
s.anoj anoj
New Update
இடிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்... நூலிலையில் தப்பித்த 50 பேர் - ஷாக்கிங் வீடியோ

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வில்சன் கார்டன் பகுதியில் மெட்ரோ கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த மூன்று மாடி கட்டிடம் இன்று இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் மற்றும் காயங்கள் யாருக்கும் ஏற்படவில்லை.
இந்த கட்டிடம் கடந்த மூன்று ஆண்டுகளாகச் சாய்ந்து நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில், விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கட்டிடம் இடிந்து விழுவதற்கு முன்பு அங்கிருந்த அனைவரையும் அப்புறப்படுத்தினர். 

Advertisment


கட்டிடம் இடிந்து விழப்போவதைப் பார்த்ததால், அங்கு வசிக்கும் 50க்கும் மேற்பட்டோர் நூலிழையில் உயிர் தப்பித்தனர். இந்த கட்டிடம் விழும் காட்சி சமூக வலைதளத்தில் வெகமாக பரவி வருகிறது. இவ்விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: