tik tok tamil : சோஷியல் மீடியாவில் கொடி கட்டி பறந்துக் கொண்டிருக்கும் டிக் டாக் ஆப்பில் தற்போது கேரளா போலீஸும் இணைந்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இதுவரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.
டிக் டாக் ஆப் பற்றி சொல்வே வேண்டாம். எல்லோருக்குமே தெரியும். ஆடல், பாடல், டப்மேஷ் என் இன்றைய இளைஞர்கள் காலை முதல் இரவு வரை அதிலே தவம் இருக்கிறார்கள். எந்த பக்கம் திரும்பினாலும் டப் மேஷ் வீடியோக்கள் தான்.
இன்றைய தலைமுறையினர் மத்தியில் டிக் டாக் ஆர்வம் எதுவரை சென்றுள்ளது என்றால் , வித்யாசமான வீடியோக்கள் எடுப்பதற்காக உயிரை பணயம் வைக்கும் வகையில் நீண்டுள்ளது. இதுக் குறித்து ஏகப்பட்ட விழிப்புணர்வுகள், அறிவுரைகள் பரப்பப்பட்டு வந்தாலும் சிலர் அதை கண்டுக் கொள்வதாக தெரியவில்லை.
சமீபத்தில் கேரளாவில் டிக் டாக் வீடியோவிற்காக இளைஞர் ஒருவர், ஆபத்தான முறையில் ரோட்டில் சாகசம் செய்த வீடியோ கடுமையான கண்டனங்களை பெற்றிருந்தது. இந்நிலையில், இதுப் போன்ற வீடியோக்களை கண்டறியும் விதமாகவும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கேரளா போலீஸ் டிக் டாக் ஆப்பில் இணைந்துள்ளது. இதன் மூலம் இளைஞர்களையும் கண்காணிக்கவுள்ளது. அதே போல் சில விழிப்புணர்வு பகிர்வுகளையும் அதில் பதிவிட உள்ளது.
இனியாரும் தப்ப முடியாது. இந்த அறிவிப்பை டிக் டாக் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரிந்துள்ளது.