New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/09/sultan-bull-alcohol.jpg)
ஹரியானாவில் உள்ள இந்த எருமையானது இந்தியாவிலேயே அதிக மதிப்புள்ள எருமையாக கருதப்படுகிறது
ஹரியானாவில் உள்ள எருமை ஒன்று இந்தியாவிலேயே அதிக மதிப்புள்ள எருமையாக கருதப்படுகிறது. ஆம், இந்த எருமைம ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.1 கோடி வரை, வருமானம் ஈட்டி தருகிறதாம். இனப்பெருக்கக்கம் செய்யவதற்காக அந்த எருமையின் விந்தணுக்கள் விற்பனை செய்யப்படுவதில் இந்த தொகை ஈட்டப்படுகிறதாம்.
அந்த எருமையின் எடை கிட்டத்தட்ட 1500 கிலோவிற்கும் மேல், 5’11” அடி உயரம், 14 அடி நீளம் கொண்டதாம். தற்போதைய நிலையில், சுல்தானின் பதிப்பு ரூ.21 கோடி என கூறப்படுகிறது. குறிப்பிடும்படியாக இந்த எருமைக்கு தினமும் விஸ்கி அருந்த பிடிக்குமாம். எனவே, அதன் உரிமையாளர் தினமும் சுல்தானுக்கு விஸ்கி அளித்து வருகிறாராம். விஸ்கி அடிக்கும் போது சுல்தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அதன் உரிமையாளர் கூறுகிறார்.
சமூக தளவாசிகள் இதனை ஆச்சர்யத்துடன் பார்த்து பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். சிலர் தினமும் எருமைக்கு விஸ்கி அளிப்பதால் அதன் உடல் பாதிக்கக் கூடும் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.