New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/10/man-saved.jpg)
உயிர் பிழைத்திருக்க மாட்டார் என அஞ்சிக்கொண்டிருக்கும் வேளையில், அவர் நொறுங்கிய தன் காரிலிருந்து விபத்து நடந்த அதிர்ச்சியே இல்லாமல் தலையை தூக்குகிறார்.
அதிசயங்கள் எப்போதாவதுதான் நடக்கும். பெரும் விபத்துகளில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் எத்தனையோ பேரின் கதைகளை கேட்டுப்பார்த்தால் தெரியும், அதிசய நிமிடங்களின் அனுபவம் எப்படி இருக்கும் என்று.
அப்படித்தான், சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. கார் விபத்திலிருந்து ஒருவர் காயங்களின்றி தப்பித்த அதிசயம். இது அதிசயமா என்கிறீர்களா? ஆமாம், சிறிய விபத்தில்லை. கார் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென ராட்சத கிரேன் இயந்திரம் விழுந்தது. இந்த விபத்தில், கார் அப்பளம்போல் நொறுங்கியது.
காரின் உள்ளே இருப்பவர் உயிர் பிழைத்திருக்க மாட்டார் என அஞ்சிக்கொண்டிருக்கும் வேளையில், அவர் நொறுங்கிய தன் காரிலிருந்து விபத்து நடந்த அதிர்ச்சியே இல்லாமல் தலையை தூக்குகிறார்.
அவருக்கு கையில் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நீங்களும், அந்த வீடியோவை பாருங்கள். அப்போதுதான், அந்த விபத்திலிருந்து அவர் உயிர் பிழைத்தது அதிசயம் என நம்புவீர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.