viral video trending today : தென் ஆப்பிரிக்காவில் காட்டுக்குள் சுற்றுலா சென்றவர்களை வெறிப்பிடித்த காண்டா மிருகம் 1 கிலோ மீட்டர் வரை துரத்தி சென்ற வீடியோ பார்ப்பவர்களுக்கு அச்சத்தை தந்துள்ளது.
Advertisment
தென் ஆப்பிரிக்காவில் உள்ள குரூகர் தேசியப் பூங்கா காட்டு பகுதியில் அமைந்துள்ளது. சிங்கங்கள், புலிகள் என அனைத்து வனவிலங்குகளும் இங்கு உள்ளன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றன. இங்குள்ள விலங்குகளை பார்க்க சபாரி மூலமே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு இந்த பூங்காவில் சுற்றுலா சென்ற பயணிகள் நொடி பொழுதில் வெறிப்பிடித்த காண்டாமிருகத்திடம் இருந்து உயிர் தப்பித்துள்ளனர். ஜீப் வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த அவர்கள் விலங்குகளை படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கடும் கோபம் கொண்ட காண்டாமிருகம் ஒன்று ஜீப்பில் வந்தவர்களை விரட்டியது. இதனைக் கண்ட ஜீப் ஓட்டுநர் அந்த வாகனத்தை வேகமாக இயக்கியும், ஆத்திரம் தணியாத அந்த காண்டாமிருகம் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றுலா பயணிகளை ஓட ஓட விரட்டியது.
2 ஆயிரம் கிலோ எடை கொண்ட காண்டாமிருகம் அத்தனை வேகத்தில் வந்ததைக் கண்ட சுற்றுலா பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். நீண்ட விரட்டலுக்குப் பின் காண்டாமிருகம் திரும்பிச் சென்றது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புலி, சிங்கங்களுக்கு இணையாக காண்டாமிருகம் பயணிகளை துரத்திய சம்பவம் பார்ப்பவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.