New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/06/leopard1-759.png)
கடந்த மே-மாதம் 3-வயதேயான குழந்தையை சிறுத்தை தாக்கியது.
மும்பையில் உள்ள கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த நாய் ஒன்றை தாக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மாணவிகள் விடுதிக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரில் படித்து வரும் மாணவிகளுக்கான விடுதியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
மாணவிகள் விடுத்திக்குள் புகுந்த சிறுத்தையானது அங்கிருக்கும் நாய் ஒன்றை வேட்டையாட முயற்சிக்கிறது. மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிக்குள் இந்த சம்பவம் நிகழ்ந்ததால், அங்குள்ள மாணவிகள் அச்சமடைந்துள்ளனர்.
மும்பையில் உள்ள ஆரே மில்க் காலனியில் இதுபோன்ற சம்பவங்கள் ஒன்றும் புதிதல்ல. அங்கு கடந்த மே-மாதம் 3-வயதேயான குழந்தையை சிறுத்தை தாக்கியது. அந்த குழந்தையின் தாய் அந்த குழந்தையை சிறு காயங்களுடன் காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2014-15-ம் ஆண்டில் காடக்படாவில் பகுதியில் மேற்கொள்ள ஆய்வின் படி அங்குள்ள 140 ச.கி.மீ பகுதியில் 35 சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.