Advertisment

சேமிப்பை தொடங்க காத்திருக்காதீர்கள்.. உங்களை கோடீஸ்வரன் ஆக்கும் 5 எளிய வழிகள் இதோ!

உங்கள் தேவைகளுக்கு செலவு செய்வதில் கவனம் செலுத்துங்கள், ஆனால் தேவைகளை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிக்கத் தொடங்க போதுமான நிதி இருக்கும் வரை காத்திருக்க வேண்டாம்.

author-image
WebDesk
New Update
Get Minimum Assured Sum of Rs 100000 and Other Many Other Benefits in LICs Dhan Rekha Plan

எல்ஐசியின் தன் ரேகா டெர்ம் பிளான் பல்வேறு வகையான நன்மைகளை வழங்குகிறது.

ஒருவர் நிதி இலக்குகளை நிர்ணயித்து, அந்த இலக்குகளை அடைய திட்டத்தை உருவாக்குவது பொருளாதார ரீதியாக உயர்த்தும். இது வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள உதவும்.

Advertisment

1) கனவு காணுங்கள்

இலக்கு என்பது ஒரு எண்ணுடன் இணைக்கப்பட்ட கனவு. 50 வயதில் ஓய்வு பெற விரும்புவது உங்கள் கனவாக இருக்கலாம்.

வங்கியில் எவ்வளவு பணம் இருக்க வேண்டும் என்பதைக் கணக்கிடும்போது அது ஒரு இலக்காக மாறும்.

மேலும், பணவீக்கம் எவ்வளவு குறையும், அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு மாதம் எவ்வளவு பணம் தேவை என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

அது ரூ. 2 கோடி அல்லது 10 ஆக இருக்கலாம்.

2) அதிக விலை கடனை குறைக்கவும்

இன்றைய காலகட்டத்தில் கடன் வாங்குவது என்பது சற்று சிக்கலானது. அதாவது 3 பழத்துக்காக ஒரு மரத்தையை திருப்பி கொடுப்பது போன்றது.

அதாவது, உங்கள் கிரெடிட் கார்டுக்கு 35% வட்டியும், தனிநபர் கடனுக்கு 22% வட்டியும் செலுத்தினால், உங்கள் இலக்குகளை நீங்கள் நெருங்க மாட்டீர்கள்.

22% கடனை திருப்பிச் செலுத்துவது உங்கள் முதலீட்டில் 22% சம்பாதிப்பது போன்றது. எனவே, உங்களுக்கு 22% உறுதியான வருவாயை அளிக்கும் ஒரு முதலீட்டை பற்றி யோசிக்க வேண்டும். இது உங்கள் நிதி தகுதியை கூட்டும்.

3) அவசர நிதியை உருவாக்கவும்

நிச்சயமற்ற தன்மை எல்லா இடங்களிலும் உள்ளது என்பதை பெருந்தொற்று பரவல் காலம் கற்பித்தது. எனவே, நீங்கள் அவசரங்களைத் தடுக்க முடியாது.

ஆனால் நீங்கள் அவற்றைத் திட்டமிடலாம். அவசர நிதியை எவ்வாறு உருவாக்குவது?

உங்கள் மாத வருமானத்தில் 6-12 மாதங்கள் அவசர நிதியாக ஒதுக்குங்கள். எளிதில் அணுகக்கூடிய திரவ வைப்பு அல்லது திரவ நிதிகளில் முதலீடு செய்யுங்கள்.

உங்களின் எஞ்சியுள்ள பணத்தில் சுதந்திரமாக முதலீடு செய்ய உங்கள் அவசரகால நிதி உங்களுக்கு பாதுகாப்பு வலையை வழங்குகிறது

4) இடர்களை ஈடுகட்ட காப்பீடு

பொதுவாக அனைத்து தரப்பு மக்களுக்கும் இது பொருந்தும். நமது வருமானத்தில் சரியான காப்பீட்டை எடுத்துக் கொள்வது நமது வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

மேலும், உங்கள் அன்புக்குரியவர்களின் தேவைகள் மோசமான நிலையில் கூட பாதுகாக்கப்படும். எனவே, உங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் உடல்நலக் காப்பீடு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் கடன் போன்ற பொறுப்புகள் காப்பீடு செய்யப்பட வேண்டும்.

5) SIP முதலீடு

நீங்கள் நிதி இலக்குகளைத் திட்டமிடும்போது, ​​இரண்டு விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். ஒன்று குறுகிய கால முதலீடு திட்டம், நீண்ட கால முதலீடு திட்டம்.

உங்கள் தேவைகளுக்கு செலவு செய்வதில் கவனம் செலுத்துங்கள், ஆனால் தேவைகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

சேமிக்கத் தொடங்க போதுமான நிதி இருக்கும் வரை காத்திருக்க வேண்டாம். அது ஒருபோதும் நடக்காது. ஈக்விட்டி ஃபண்டுகளில் ரூ. 20,000 மாத எஸ்ஐபி 25 ஆண்டுகளில் 14% ஆண்டு வருமானம் ரூ.5.50 கோடியாக வளரும்.

உங்கள் நிதி இலக்குகளை அடைய பணம் கடினமாக உழைக்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment