பொதுத்துறை, தனியார் மற்றும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை வழங்குகின்றன. இந்தத் திட்டங்களுக்கு வங்கிகள் முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன.
அதிகபட்சமாக ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் 9.1 சதவீதம் முதல் 9.60 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளை பொருத்தவரை ரூ.5 லட்சத்துக்குள்ளான முதலீடுகள் மட்டுமே காப்பீட்டு வரம்புக்குள் வரும் என்பதையும் முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை விட 5 மடங்குவரை லாபம் கொடுத்த மாதாந்திர பரஸ்பர நிதிகள் முதலீடுகள் குறித்து பார்க்கலாம்.
1) ஹெச்.எஸ்.பி.எஸ்.சி ஸ்மால் கேப் ஃபண்ட்
ஹெச்.எஸ்.பி.எஸ்.சி ஸ்மால் கேப் ஃபண்ட் கடந்த 3 ஆண்டுகளில் ஆண்டுக்கு 41.01 சதவீதம் வரை லாபம் கொடுத்துள்ளது.
2) ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால் கேப் ஃபண்ட்
ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால் கேப் ஃபண்ட் திட்டம் கடந்த
3 ஆண்டுகளில் ஆண்டுக்கு 39.96 சதவீதம் வரை லாபம் கொடுத்துள்ளது.
3) நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்
நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் திட்டம் கடந்த 3 ஆண்டுகளில் ஆண்டுக்கு 42.14 சதவீதம் வரை லாபம் கொடுத்துள்ளது.
4) குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட்
குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் திட்டம் கடந்த 3 ஆண்டுகளில் ஆண்டுக்கு 46.89 சதவீதம் வரை லாபம் கொடுத்துள்ளது.
5) ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் கமாடிடிட்டி ஃபண்ட்
ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் கமாடிடிட்டி ஃபண்ட் திட்டம் கடந்த 3 ஆண்டுகளில் ஆண்டுக்கு 39.89 சதவீதம் வரை லாபம் கொடுத்துள்ளது.
மேலும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை காட்டிலும் மாதாந்திர முதலீடு மிக எளிமையான திட்டமாகும். இந்தத் திட்டத்தை மாதம் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் தொடங்கலாம்.
ஆனால் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டில் தொடக்கத்திலேயே ஒரு பெரிய தொகை முதலீட்டுக்கு தேவைப்படுகிறது. ஆக, சிறிய தொகையை முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு ஆர்.டி மற்றும் மாதாந்திர பரஸ்பர நிதிகள் திட்டங்கள் ஏற்றதாக உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“