2020-21ஆம் நிதியாண்டுக்கான PF வட்டித் தொகை மிக விரைவில் செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 6 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் PF வட்டித் தொகை செலுத்தப்படவுள்ளது. தீபாவளி பண்டிகை வரவிருக்கும் சமயத்தில், இந்த PF தொகை அறிவிப்பு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2020-21ஆம் ஆண்டுக்கு PF வட்டி விகிதம் 8.5% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால், ஏரளாமானோர் பணத்தை எடுத்ததன் காரணமாகவும், குறைந்த அளவில் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் டெபாசிட் செய்யப்பட்டதன் காரணமாகவும், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2019-20ஆம் நிதியாண்டு மார்ச் மாதம் முதல் PF வட்டித் தொகை 8.5 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டது. இது கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த வட்டியாகும். இதற்கு முன் 2018-19ஆம் ஆண்டில் 8.65% வட்டியும், 2017-2018 ஆம் ஆண்டில் 8.55 % வட்டியும், 2016-2017 ஆம் ஆண்டில் 8.65% வட்டியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொரோனா முதல் அலையின்போது 'பிரதமரின் கரீப் கல்யாண் யோஜ்னா' திட்டத்தின் ஒரு பகுதியாக வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன்பணம் எடுக்கும் சிறப்புத் திட்டம் கடந்த ஆண்டு மார்ச்சில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது மீண்டும் கொரோனா 2-வது அலையின் காரணமாக தொழிலாளர்களின் நலன் கருதி அதே சிறப்புத் திட்டத்தை மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை மீண்டும் கொண்டு வந்தது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் இருந்து 3 மாத அடிப்படை ஊதியம் அல்லது 75 சதவீத வைப்பு தொகை, இதில் எது குறைவோ அந்த தொகையை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம். இதைவிட குறைவான தொகையை எடுக்கவும் விண்ணப்பிக்கலாம்.
பிஎஃப் கணக்கில் வருடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால், அதன் வட்டி மீது இப்போது வரி விதிக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- பிஎஃப் பேலனஸ் எஸ்எம்எஸ் வாயிலாக பார்க்கும் வழிமுறை
EPFOHO UAN ENG என்ற வடிவில் UAN நம்பரை வைத்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ஈசியாக பேலன்ஸ் தெரிந்துகொள்ளலாம். உங்களின் செல்போனுக்கு பிஎஃப் பேனல்ன் தொகை உடனடியாக மெசேஜ் செய்யப்படும். மேலும், EPFO வாடிக்கையாளர் விருப்பமான தொடர்பு மொழியைத் மெசேஜில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. மிஸ்ஸூடு கால் பேலன்ஸ் பார்க்கும் முறை
EPFO வாடிக்கையாளர் பதிவு செய்த மொபைலில் இருந்து, மேலும் குறிப்பிட்டு எண்ணுக்கு மிஸ்ஸூடு கால் கொடுத்தும் பேலன்ஸ் அறிந்துகொள்ளலாம். இந்த வசதியானது, உங்களது UAN நம்பருடன் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே பெற முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil